Skip to main content

இந்தியாவில் முதன்முறை : தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் கார்கள்!

 இந்தியாவில் முதன்முதலாக ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களின் உற்பத்தி ஆலை தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் அமைய உள்ளது.

உலகின் தலைசிறந்த சொகுசு கார்களாக ஜாகுவார், லேண்ட் ரோவர் உள்ளிட்ட கார்கள் பார்க்கப்படுகிறது. இதுவரை பிரிட்டன், சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் மட்டுமே இதற்கான கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

தற்போது, இந்தியாவில் விற்பனையாகும் ஜே.எல்.ஆர் கார்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்படுபவையே.

இந்த நிலையில் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையில் ரூ. 9,000 கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களின் உற்பத்தி ஆலை அமைக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் முதல்முறையாக ஜாகுவார், லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் தயாரிக்கப்படும் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாறியுள்ளது.

Image

கடந்த மார்ச் மாதம் 9,000 கோடி முதலீட்டில் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ராணிப்பேட்டையில் புதிதாக அமையவுள்ள இந்த டாட்டா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சொகுசு கார்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும், ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Jaguar Land Rover will shed a quarter of its production capacity | HT Auto

இதன்மூலம் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர் போல ராணிப்பேட்டையைச் சுற்றி ஏராளமான வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமையும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த முதலீட்டால் நேரடி மற்றும் மறைமுகமாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக தற்போது இந்தியா உள்ளது. நாட்டில் மாருதி சுசூகி நிறுவனத்துக்கு அடுத்தபடியாக சந்தை மதிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது டாடா குழுமம்.

Vinfast Investment In India: VinFast breaks ground for integrated EV plant in Thoothukudi, TN; to invest USD 500 mn, ET Auto

தூத்துக்குடியில் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16000 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ள மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் தற்போது டாடா மோட்டார்ஸின் முதலீடு, தமிழ்நாட்டில் மற்றொரு குறிப்பிடத்தக்க வாகன முதலீட்டின் தொடக்கமாக அமைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மக்களவை தேர்தல் : 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

18 வருடங்களுக்கு பிறகு… ஜோடி சேரும் சூர்யா-ஜோதிகா… இயக்குனர் யார் தெரியுமா…?!

ஈஷா தன்னார்வலர் மாயமான வழக்கு : காவல்துறை பதில்!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...