Skip to main content

Posts

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...
Recent posts

காவி உடை அணியாதது ஏன்? - சாமியாராக மாறிய புவனேஸ்வரி சொல்லும் விசித்திர காரணம்!

பாசமலர் சீரியல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை புவனேஸ்வரி. தொடர்ந்து, சந்திரலேகா, சித்தி என அடுத்தடுத்து தொடர்களில் நடித்து பிரபலமானார். சில சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் புவனேஸ்வரி நடித்துள்ளார். பிஸியான நடிகையாக மாறிய ஒரு கட்டத்தில் புவனேஸ்வரி விபச்சார வழக்கில் சிக்கியதால் பட வாய்ப்புகள் குறைந்து போனது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் இவர். ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சென்னைக்கு வேலை தேடி வந்த புவனேஸ்வரி, கடுமையான உழைப்பால் டிவி சீரியல் மற்றும் சினிமாக்களில் பலவற்றில் நடித்தார். சேதுராமன் தலைமையில் இயங்கிய தேவர் பேரவையில் மகளிர் அணி தலைவராக இருந்தார். மேலும், சென்னையில் 3, 4 பங்களாக்களை வைத்துக்கொண்டு அதனை சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு வருகிறார். தற்போது, புவனேஸ்வரி பழைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, துறவு பூண்டு சாமியாராக வாழ்ந்து வருகிறார். காசிக்கு சென்று தீட்சையும் பெற்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல், தினந்தோறும் வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் மக்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார...

ரஹ்மான் ரூட்டில் தயாரிப்பாளர் சங்கம்... யூடியூப் ரிவ்யூவர்ஸுக்கு செக்!

  புரிதல் இல்லாமல் விமர்சனம்! தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றம் காரணமாக அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களுக்கு முன்னதாக தகவல்களை பொது வெளியில் கொண்டு செல்லக்கூடிய வலிமை மிக்க தளங்களாக முகநூல், எக்ஸ்தளம், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. முன்னணி அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், இணைய தளங்கள் மேற்கண்ட தளங்களில் வெளியிடப்படும் தகவல்களை செய்திகளாக மறுபதிப்பு செய்கின்றன. இதன் காரணமாக சமூக வலைதளங்கள் செய்தி நிறுவனங்கள் போன்று தகவல் தொடர்பு சாதனங்களாக ஆதிக்கம் செலுத்துகின்றன. இதன் காரணமாக மற்றவர்களை காட்டிலும் நேரடி பாதிப்புக்கு உள்ளாகிறது திரையுலகம். தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், தொழில் ரீதியிலான போட்டியாளர்களை காலி செய்யவும் சமூகவலைதளங்களை கரன்சிகளை கொட்டி கொடுத்து வளர்த்தவர்கள் திரையுலகினர். தடுமாறும் தமிழ் திரைப்பட உலகம்! விமர்சனம் பற்றிய அடிப்படை புரிதலே இல்லாமல் டிவிட்டர் தளங்களில் தனி நபர்கள் கொடுக்கும் மதிப்பெண்களை பெருமையாக போஸ்டர் வெளியிட்டு கொண்டாடியதும் திரையுலகம். டிவிட்டர் இன்புளுயஸ்யர், வர்த்தக வல்லுனர்கள், சினிமா கிரிட்...

சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் பரிதாப மரணம்… மகளின் உருக்கமான பதிவு!

பிரபல சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் சென்னையில் இன்று (டிசம்பர் 4) காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நடிகராக அவர் வலம் வந்தார். சீரியலில் நடித்த தீபா என்பவரை காதலித்தும் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். தாயான பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்களில் நடிக்காமல் இருந்த தீபா, அண்மையில் தான் மீண்டும் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார். நேத்திரனின் மூத்த மகள் அபிநயா இளம் வயதில் தன்னுடைய தந்தையோடு இணைந்து சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். தற்போது, அபிநயா திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இவர், கடந்த ஜூலை மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார். அதில் தன்னுடைய தந்தை இப்பொழுது ஐசியூவில் இருப்பதாகவும், எல்லாம் கைமீறி போய் விட்டதாகவும், தனது தந்தைக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவருக்கு புற்றுநோய் என்றும் கூறியி...

அமரன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை கோரி வழக்கு!

அமரன் திரைப்படம் நாளை ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 4) வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. முதல் 3 நாளில் உலகளவில் 100 கோடி வசூலித்த இத்திரைப்படம், இதுவரை சுமார் 300 கோடி வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அமரன் திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்தின் ஒரு காட்சியில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஒரு போன் நம்பரை எழுதி கொடுப்பார். அந்த நம்பர் உண்மையில் ஒரு பொறியியல் மாணவர் வாகீசன் என்ற பொறியியல் மாணவரின் மொபைல் எண். இத்திரைப்படத்தை கண்ட பலரும் தனக்கு தொடர்ந்து கால் செய்து வருவதாகவும், படம் வெளியானது முதலே தன்னால் தூங்கவோ படிக்கவோ வேல...

'புஷ்பா 2' ரிலீஸ்... தியேட்டரில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தை தியேட்டரில் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜூன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தநிலையில், ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் பிரிமியர் ஷோ நேற்று (டிசம்பர் 4) திரையிடப்பட்டது. இதைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கு முன்பு குவிந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வேளையில், அல்லு அர்ஜூன் சர்ப்ரைஸாக திரையரங்குக்கு எண்ட்ரி கொடுத்தார். இதனால் அல்லு அர்ஜூனுடன் செல்ஃபி எடுப்பதற்காக கூட்டம் முண்டியடித்து. இதனால் கூட்ட நெரிசல் எற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் தில்சுக்நகரைச் சேர்ந்த ரேவதி (வயது 39), அவரது மகன் ஸ்ரீ தேஜ் (வயது 9) ஆகியோர் சிக்கி மயக்கமடைந்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு, அருகில் உள்ள பெகும்பெட் கே.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அ...

இசையமைப்பாளர் ஆதித்யனை நினைவூட்டும் ‘ரோஜா மலரே’ பாடல்கள்!

  உதயசங்கரன் பாடகலிங்கம் ’விக்ரம்’ படத்தில் ஒரு காட்சியில் ‘சக்கு சக்கு பத்திகிச்சி’ பாடல் வந்தபிறகு, அதனைத் தேடித் தேடிக் கேட்பவர் எண்ணிக்கை அதிகமானது. 1995-இல் வெளியான ‘அசுரன்’ படத்திற்காக அதனைத் தந்தவர் இசையமைப்பாளர் ஆதித்யன். அமரன் தொடங்கி நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன் என்று அவர் பல படங்களில் ஹிட் பாடல்கள் தந்திருக்கிறார். அவற்றில் ஒன்றாக விளங்குகின்றன ‘ரோஜா மலரே’ படப் பாடல்கள். ஒலி வடிவமைப்பாளராகத் திரையுலகில் தனது வாழ்வைத் தொடங்கியவர் ஆதித்யன். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் சமையற்கலை வல்லுநராகவும் ஓவியராகவும் கூட அவர் அறியப்படுகிறார். ஆதித்யன் இசையில் அமைந்த பாடல்களில் பல, காலம் கடந்து தற்போது பலரால் கொண்டாடப்படுகின்றன. செயற்கைக்கோள் தொலைக்காட்சி யுகத்தின் வளர்ச்சி தமிழகத்தில் தொடங்கிய காலகட்டத்தில் திரும்பத் திரும்ப ’ரோஜா மலரே’ படப் பாடல்கள் நம் விழியிலும் செவியிலும் நுழைந்தன. நல்லனுபவத்தைத் தந்தன. அந்த இனிமையான காலகட்டத்தை நினைவூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பினைத் தருகிறது இப்படத்தின் இசை. தொண்ணூறுகளில் வந்திருக்க வேண்டியது! மென்மையா...

கல்யாணம் முடித்து குழந்தை பெற்ற பிறகு டாக்டர், எம்.டி பட்டம் பெற்ற சிவகார்த்திகேயனின் சகோதரி!

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் மிக முக்கிய நடிகராக மாறி இருக்கிறார். ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து அந்த படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் புதிய சாதனை படைத்தது. சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு துப்பாக்கி படம் போல் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையை முருகதாஸ் புது உச்சத்திற்கு கொண்டு செல்வாரா என எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே, அரசியலுக்கு செல்வதால் நடிப்புக்கு முழுக்கு போடும் விஜய்யின் இடத்தை வருங்காலத்தில் சிவகார்த்திகேயன் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால், அமரன் படம் அவரை அத்தகைய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்றால் மிகையல்ல. சிவகங்கையில் ஜி தாஸ் மற்றும் ராஜி தாஸ் தம்பதியினருக்கு 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் சிவகார்த்திகேயன். இவருக்கு கௌரி மனோகரி என்ற சகோதரியும் இருக்கின்றார். தற்போது, தனது சகோதரி 42-வது வயதில் படைத்த சாதனை குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு MBBS...

நடிகர் சிவராஜ்குமாருக்கு ஏற்பட்ட அந்த நோய்… அமெரிக்கா சென்ற பின்னணி!

கன்னடப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் கடந்த 2021 ஆம் ஆண்டு மரணமடைந்தார். ராஜ்குமார் குடும்பத்தில் நடந்த இந்த இறப்பு திரையுலகை கலங்கடித்தது. புனித் போலவே அவரது மூத்த சகோதரரான சிவராஜ்குமாரும் கன்னட திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர், ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். தனுஷ் உடன் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவராஜ்குமார் தன்னை பாதித்த நோய் குறித்த சரியான விவரங்களைக் குறிப்பிடாமல், 'நான் ஒரு மனிதன். எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்து வருகிறேன். இரண்டு கட்ட சிகிச்சைகளை முடித்துவிட்டேன், இன்னும் இரண்டு கட்ட சிகிச்சை பாக்கி உள்ளது. இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ அறுவை சிகிச்சை செய்து கொள்வேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவிலேயே சிகிச்சை பெ...

விமர்சனம்: புஷ்பா 2 !

  உதயசங்கரன் பாடகலிங்கம் குடும்பத்தோடு ரசித்து மகிழலாமா?! ‘இது பான் இந்தியா படமல்ல, ஒரு தெலுங்கு படம்’ என்றே ‘புஷ்பா’ பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூறி வந்தார் இயக்குனர் சுகுமார். ஆனால், அதன் தெலுங்கு, மலையாள ‘டப்’ பதிப்புகளை விட இந்திப் பதிப்பு மாபெரும் வெற்றியை ஈட்டியது. பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் நாயகன் அல்லு அர்ஜுனுக்குத் தனி ரசிகர் கூட்டம் உருவாகக் காரணமானது. இதன்பிறகு பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்தார் நாயகி ராஷ்மிகா மந்தனா. மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு அது. அதன் தாக்கத்தின் காரணமாக ‘புஷ்பா 2’ திரைப்படம் தெலுங்கில் தயாராகி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மட்டுமல்லாமல் பெங்காலி மொழியிலும் ‘டப்’ செய்யப்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாகச் செம்மரம் வெட்டுகிற கூலியாளாக இருந்த புஷ்பா எப்படி மிகப்பெரிய கடத்தல்காரர்களில் ஒருவராகி, அதன் சிண்டிகேட்டின் தலைவர் ஆக ஆனார் என்பதைச் சொன்னது ‘புஷ்பா’. இரண்டாம் பாகமோ, கோடிகளில் புரளும் அவர் எவ்வாறு ஒரு மாநிலத்தின் அரசியலைத் தீர்மானிப்பவராக மாறினார் என்பதைச் சொல்கிறது. இதுதான் கதை என்று த...