Skip to main content

பகத் பாசில் ‘சம்பளம்’ இவ்ளோ…வா…?!


இன்றைய தேதியில் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிற நட்சத்திரக் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவராகத் திகழ்பவர் பகத் பாசில். ‘ஃபாஃபா’ என்பது ஜென்ஸீ தலைமுறை ரசிகர்கள் இவருக்கு வைத்த செல்லப்பெயர். கல்யாணி பிரியதர்ஷன் உடன் பகத் பாசில் நடித்த ‘ஓடும் குதிரா சாடும் குதிரா’ ஓணம் வெளியீடாக வரவிருக்கிறது. அதன் டீசர் சமீபத்தில் வெளியானது.

தமிழில் வடிவேலு உடன் அவர் நடித்த ‘மாரீசன்’ திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், ஆரம்ப காலத்தில் பகத் பாசில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன்.

’கையெத்தும் தூரத்’ படத்தின் ஹீரோவாக அறிமுகமான பகத், சுமார் ஏழாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் ‘கேரளா கஃபே’, ‘பிரமணி’, ‘காக்டெய்ல்’ உள்ளிட்ட படங்களில் தலைகாட்டினார்.

பகத் பாசிலுக்குப் பெரியளவில் பெயர் வாங்கித் தந்த படம் ‘சப்பா குரிஷு’. இதில் வினீத் சீனிவாசன் இன்னொரு நாயகனாக நடித்திருந்தார். சமீர் தாஹிர் இயக்கிய இப்படம் தமிழில் ‘புலிவால்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.

அந்தப் படத்தில் ஒரு ‘நெகட்டிவ்’ பாத்திரத்தில் நடித்திருந்தார் பகத். அதற்காக அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இத்தகவலைத் தெரிவித்தவர், ‘அந்த படத்துக்காக ரொம்ப கடினமா பகத் உழைச்சதை பார்த்தேன். அவர்கிட்ட உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்னு கேட்டேன். அப்போ, நீங்க கொடுக்கறதைக் கொடுங்கன்னு சொன்னார். நான் வற்புறுத்திக் கேட்டபிறகு, தான் நடிச்சிட்டிருக்கிற ‘டர்னமெண்ட்’ படத்துக்காக 65,000 ரூபாய் வாங்கினதா சொன்னார். அதுக்கப்புறம் தான் நான் லட்சம் ரூபாய் சம்பளம் பிக்ஸ் பண்ணேன்” என்றிருக்கிறார்.

“அன்னைக்கு ’சப்பா குரிஷு’ படத்துக்காக ஒரு லட்சம் ரூபாய் தான் கொடுத்தேன். இன்னிக்கு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை கொடுத்தாலும், அவரைப் பார்க்க முடியாத நிலைமை இருக்குது. இதுதான் சினிமா” என்று கூறியிருக்கிறார் லிஸ்டின்.

’ஹீரோ மட்டுமில்ல, ஒரு படம் ஹிட் ஆனால் புரொடியூசர் நிலமையும் அப்படித்தானே’ என்று ‘கமெண்ட்’ அடிப்பவர்களிடம் இவர் என்ன பதில் சொல்வாரோ?!

இதையும் படிங்க!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...