Skip to main content

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார்.

இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும்.

குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார்.

விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன.

லோகேஷ் தனது அபிமான நடிகரான கமல்ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்திலிருந்து ’சக்கு சக்கு வத்திகுச்சி’ என்ற பாடலைப் பயன்படுத்தினார். அதோடு ‘கல்வியா செல்வமா வீரமா’ என்ற சிவாஜியின் பாடலையும் பயன்படுத்தியதற்கு ரசிகர்கள் திரையரங்குகளில் கொடுத்த வரவேற்பு பலருக்கும் ஞாபகம் இருக்கலாம்.

அதே போன்று மீண்டும் விஜய்யை வைத்து இயக்கிய லியோ படத்தில் இடம்பெற்ற கஃபே சண்டைக்காட்சிக்கு ’கருகரு கருப்பாயி' மற்றும் ‘தாமரை பூவுக்கு தண்ணிக்கு என்னைக்கும்’ ஆகிய இரு பாடல்களை அவர் பயன்படுத்தி இருந்ததை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இதனையடுத்து யூடியூப், ஸ்பாடிஃபை போன்ற தளங்களில் ‘லோகேஷ் கனகராஜ் விண்டேஜ் பாடல்கள்’ என பல ஆல்பங்கள் வெளியாகின.

இதனால் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கியுள்ள கூலி திரைப்படத்தில் அவர் என்ன விண்டேஜ் பாடலை பயன்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் அந்த பாடல் குறித்து படக்குழுவினர் எந்த கருத்தையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தனர்.

இந்த நிலையில் கூலி திரைப்படம் இன்று வெளியான நிலையில் அந்த சீக்ரெட் உடைந்துள்ளது.

இப்படத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 1983ஆம் ஆண்டு வெளியான தங்கமகன் திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த ‘வா வா பக்கம் வா’ என்கிற சூப்பர் ஹிட் விண்டேஜ் பாடலை லோகி பயன்படுத்தி இருக்கிறார்.

அதே போன்று படத்தின் மற்றொரு காட்சியில் பிரசாந்த் - அஜித்குமார் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த கல்லூரி வாசல் திரைப்படத்தில் இடம்பெற்ற ’லெயோலா காலேஜ் லைலா’ பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக விண்டேஜ் பாடல்கள் குறித்து லோகேஷ் அளித்த பேட்டியில், "கூலி எழுதும் போது, ஒரு குறிப்பிட்ட பாடலைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.. பாடலின் உரிமையை கூட நாங்கள் வாங்கினோம்.. விஷயம் என்னவென்றால், நான் அதைப் பயன்படுத்த வேண்டுமா இல்லையா என்பதுதான்.. ரெட்ரோ பாடல்களுக்கான அந்த உற்சாகம் பார்வையாளர்களுக்கு இன்னும் இருக்கிறதா இல்லையா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.. இல்லையென்றால், அனிருத்தின் பாடலைக் கொண்டு என்னைக் காப்பாற்றச் சொல்வேன்” என தயக்கத்துடன் பேசியிருந்தார்.

எனினும் இப்படத்தில் இரண்டு விண்டேஜ் பாடல்களை பயன்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார் லோகேஷ்.

இதையும் படிங்க!




















Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...