Skip to main content

சூர்யாவைப் பாராட்டிய கேரள அமைச்சர்!

தமிழ் திரையுலகைச் சேர்ந்த சில நடிகர் நடிகைகள், இயக்குனர்கள் சமூக அக்கறையுடன் நலப்பணிகளை மேற்கொண்டு வருவது காலம்காலமாகத் தொடர்கிற விஷயம்.

அவர்களில் அதீதமான ஈடுபாட்டைக் காட்டுபவர்களின் முயற்சிகள் ஊடகங்களில் செய்திகள் ஆவதும், மக்களின் வரவேற்பைப் பெறுவதும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், தந்தை சிவகுமார் வழியில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் உயர்கல்வி பெற உதவும் வகையில் ‘அகரம் அறக்கட்டளை’யை நிறுவிச் செயல்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா.

சமீபத்தில் இதன் 15ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அது தொடர்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில், சூர்யாவுக்கும் அகரம் அறக்கட்டளைக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டிருக்கும் அவர், “சூர்யாவின் முயற்சி பாராட்டுக்குரியது, அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்வது” என்று கூறியிருக்கிறார்.

“சமூகத்தில் வறிய நிலையில் இருக்கும் மாணவ மாணவியர் கல்வி வழியே வாழ்வில் உயர அகரம் அறக்கட்டளை மேற்கொண்டுவரும் முயற்சிகள் ஊக்கமளிப்பதாக உள்ளது. பொருளாதார வசதி இல்லாமல் இந்தியா முழுக்கப் பல மாணவர்கள் கல்வியைப் பாதியில் நிறுத்துவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் அகரத்தின் செயல்பாடு உண்மையிலேயே அற்புதமானதாக உள்ளது.

குறிப்பாக, ஏழை மாணவ மாணவியரை அடையாளம் கண்டு அவர்களது கல்வி பூர்த்தியடைய உதவுவது வியப்பூட்டுவதாக உள்ளது” என்று பாராட்டியிருக்கிறார் ஷைலஜா.

ஆக, எல்லை தாண்டி அண்டை மாநிலத்திற்கும் பரவியிருக்கிறது சூர்யாவின் அறக்கட்டளை சிந்தனை!

இதையும் படிங்க!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...