Skip to main content

புயல் வேகத்தில் "டிராகன்" பட ஷூட்டிங் : பிரதீப் சம்பளம் இத்தனை கோடியா..?

 கோமாளி, லவ் டுடே போன்ற ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

லவ் டுடே படத்தை இயக்கியது மட்டுமின்றி அந்த படத்தில் ஹீரோவாகவும் நடித்து அசத்தினார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து அனைவரையும் வியக்க வைத்தது.

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் யாருடன் என்று கோலிவுட் வட்டாரமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில்,

அடுத்ததாக நான் படம் இயக்கப் போவதில்லை, மீண்டும் ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் LIC படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படம் டிராகன். ஓ மை கடவுளே படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் டிராகன் படத்தை இயக்குகிறார்.

டிராகன் படம் குறித்த புரோமோ வீடியோ, போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த மே 6ஆம் தேதி டிராகன் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து உள்ளதாக இயக்குநர் அஸ்வத் அறிவித்துள்ளார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அதற்காக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து திட்டமிட்டு வருகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

டிராகன் படத்தின் படப்பிடிப்பு புயல் வேகத்தில் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டே படத்தின் ஷூட்டிங்கை முடித்து ரிலீசும் செய்து விடுவார்களோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லவ் டுடே படத்திற்காக பிரதீப் ரங்கநாதனுக்கு 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும், தற்போது டிராகன் படத்தில் நடிப்பதற்காக பிரதீப் ரங்கநாதன் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்று உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

11 மாதங்களாக சிறை… செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

CSK vs RCB ஆட்டத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை தகுதி பெறுமா?

டாப் 10 செய்திகள் : மோடி வாகன பேரணி முதல் செந்தில் பாலாஜி வழக்கு வரை!

வேலைவாய்ப்பு: தஞ்சாவூர் விமானப்படைத்தளத்தில் பணி!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...