Skip to main content

அடுத்த அட்சய திரிதியைக்குள்.... தாறுமாறாக ஏறப் போகும் தங்கம்!

 தங்கம் விலை இன்று (மே 10) அட்சய திரிதியை தினத்தை ஒட்டி ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்திருக்கிறது.

இன்று அதிகாலையிலேயே கிராமுக்கு 45 ரூபாயும், சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்து, 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்றது.

அதிகாலையிலேயே தங்கம் வாங்குவதற்காக மக்கள் ஜூவல்லரிகளை நோக்கி படையெடுத்த நிலையில்... அடுத்த சில மணித் துளிகளிலேயே ஒரு சவரனுக்கு மேலும் 360 ரூபாய் உயர்ந்து, 53,640 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இதுவும் போதாதன்று அட்சய திரிதியை பிற்பகலில் 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 54 ,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்று தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து பேசிய கமாடிட்டி & கரன்சி நிறுவனத்தின் தலைவர் அனுஜ் குப்தா, "தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச காரணிகள், உள்நாட்டுக் காரணிகள் என இரு வகை காரணிகள் இருக்கின்றன.

சர்வதேச ரீதியாக பார்த்தால்... இங்கிலாந்து மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்ததாலும், அமெரிக்க டாலர் விலை அழுத்தத்தில் உள்ளதாலும் தங்கம் விலை இன்று உயர்ந்து வருகிறது.

இந்தியாவில் தங்கம் விலைக்கு இன்னொரு முதன்மையான முக்கியமான காரணி இங்கே இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. அட்சய திரிதியை தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் தங்கம் சேரும் என்ற நம்பிக்கை, பெரும் வர்த்தகமாக மாறி இந்தியாவில் இன்று தங்கத்தின் விலை மூன்று முறை உயர்வதற்கு காரணமாக அமைந்திருக்கிறது” என்கிறார்.

தங்கத்தில் முதலீடு செய்வதில் மக்களிடம் இருக்கும் ஆர்வத்தை வைத்துப் பார்த்தால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள் தங்க மார்க்கெட் நிலவரம் அறிந்தவர்கள்.

2019 அட்சய திரிதியை அன்று 10 கிராம் தங்கம் ( ஒரு அவுன்ஸ்) ரூ 31,729 ஆக இருந்தது.. அதாவது ஒரு கிராம் தங்கம் 3,170 ரூபாயாக இருந்தது. ஆனால் இந்த 2024 அட்சய திருதியைக்கு ஒரு கிராம் தங்கம் 6,770 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு பவுன் இன்றைக்கு 54,160 ரூபாய்க்கு விற்கிறது.

2023 டிசம்பர் முதல் வாரத்தில் தங்கம் விலை ஒரு சவரன் 46 ஆயிரம் ரூபாய் இருந்தது. அதாவது ஒரு கிராம் 5 ஆயிரத்து 750 ரூபாயாக இருந்தது. ஆறு மாதத்துக்குள் ஒரு கிராமுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு சவரனுக்கு 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்திருக்கிறது.

இதே திசையில் சென்றால் அதாவது 2025 அட்சய திரிதியை அன்று தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் தங்கம் 80 ஆயிரம் ரூபாய் முதல் 85 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார் மார்க்கெட் டிரேடிங் நிபுணரான அனுஜ் குப்தா.

அவரது கணக்குப்படி பார்த்தால் அடுத்த அட்சய திரிதியை அன்று ஒரு கிராம் 8 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உயரும். அதாவது ஒரு சவரன் தங்கம் 64 ஆயிரம் ரூபாயாக விற்கப்படும்.

கடந்த 2023-24 இல் தங்கம் விலை உயர்ந்த விகிதத்தை விட 2024-25 ஆம் ஆண்டுகளில் விலை உயர்வு விகிதம் வேகமாக இருக்கும் என்பதுதான் தங்க மார்க்கெட் நிலவரமாக இருக்கிறது.

மார்க்கெட்டிங் ஆய்வாளர் மோதிலால் ஓஸ்வால் இதுகுறித்து தி மிண்ட் தளத்திடம் பேசுகையில்,

“தங்கம் விலை ஏற்ற இறக்கத்துக்கு புவி-அரசியல் பதட்டங்கள், உயரும் கடன் தொடர்பான கவலைகள், தேவை அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய காரணிகள் பின்னணியில் இருக்கின்றன. இதையெல்லாம் விட தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் தங்க விலையில் ஏற்ற இறக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட 40 க்கும் மேற்பட்ட நாடுகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன. இந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. எனவே தங்கம் விலை தாறுமாறாக உயர அதிக வாய்ப்பிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த அட்சய திரிதியைக்கே 3 முறை தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. அடுத்த அட்சய திரிதியைக்கு என்ன ஆகுமோ?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

-வேந்தன்

விமர்சனம் : ‘ஸ்டார் ‘!

அதிர்ச்சி திருதியை ஆன அட்சய திருதியை: ஹாட்ரிக் அடித்த தங்கம் விலை!

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்