Skip to main content

நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்பில் 16 வயது சிறுமி, தாய் பாலியல் வன்கொடுமை.... நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

மலையாளத் திரையுலகில் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் கலாச்சாரம் ஆழமாக வேரூன்றி உள்ளதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது தொடர்ந்து நடிகைகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகின்றனர்.

விவகாரம் முற்றியதையடுத்து, மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளனர்.

நடிகைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களைப் பற்றி விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அமைத்து உத்தரவிட்டார். இதுவரை 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்புத் தளத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை ஒருவர் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார்.

பிபின் பிரபாகர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஒன் வே டிக்கெட் என்ற படம் வெளியானது . இதில் நடிகர் பிருத்விராஜ், பாமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் மம்முட்டியும் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது 16 வயது சிறுமி மற்றும் அவருடைய தாய் இரண்டு பேரும் தங்க வைக்கப்பட்டனர். இரு வார காலமாக சிறுமியும் அவரின் தாயும் அங்கு தங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து வரப்படவே இல்லை.

இந்த நிலையில் கேமிராமேன்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் படக்குழுவைச் சேர்ந்த பலரும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி மற்றும் அவரின் தாய் இருவரும் தன்னிடம் தெரிவித்து அழுதனர் என்று நடிகை ஒருவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

-எம்.குமரேசன்

சனம் ஷெட்டிக்கு வந்த ஃபோன் கால்….என்ன நடந்தது?

விபத்தில் இருவர் சாவு… இரக்கமே இல்லாமல் சிரித்த பாகிஸ்தான் இளம்பெண்

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்