Skip to main content

'தலை கொய்யப்படும்' : கங்கனா போலீசுக்கு ஓடியது ஏன்?

நடிகை கங்கனா ரனாவத் எமர்ஜென்சி என்ற படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. படத்தில் காலிஸ்தான் போராட்டத்தின் ஜெர்னெயில் சிங் பிந்தரன்வாலாவை தீவிரவாதி போல சித்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த படத்துக்கு சீக்கிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று சோசியல் மீடியாவில் கங்கனாவை மிரட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ’எமர்ஜென்சி படம் வெளியாகட்டும் சீக்கியர்கள் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாரு... உன் படத்துக்கு செருப்படி விழும்’ என்று ஒருவர்  கூறுகிறார்.

மற்றொருவர் ’இந்திரா காந்திக்கு என்ன நடந்தது என்று தெரியுமா? அதுதான் உனக்கும் நடக்கும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். வீடியோவில்  விக்கி தாமஸ் சிங் என்பவர் தன்னை சோசியல் மீடியாவில் பிரபலமானவர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார். இவர், இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற சாவந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரை புகழ்ந்து பேசுகிறார். மேலும், தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் கங்கனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு மிரட்டல் வந்ததையடுத்து, அந்த வீடியோவை தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கங்கனா ரனாவத் , பஞ்சாப் டி.ஜி.பி, மகாராஷ்டிரா டிஜிபி, ஹிமாச்சல் பிரதேச டி.ஜிபிக்களை டேக் செய்து, தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கங்கணா நடித்த எமர்ஜென்சி படம் சீக்கியர்களை தீவிரவாதிகள் போலவும்  பிரிவினைவாதிகள் போலவும் காட்டியிருப்பதாகவும் ஏற்கனவே பல சீக்கிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

-எம்.குமரேசன்

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஆஜர்: ஏன்?

ஜூனியர் ஆர்டிஸ்ட் அம்மாவை கூட விட்டு வைக்கல : நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் மீது புகார்!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...