Skip to main content

ஹெல்த் டிப்ஸ்: பகல் நேர உறக்கம்... உடல் எடையை அதிகரிக்குமா?

ஒரு நபர், ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், அதை குறைவான தூக்கம் என்று சொல்கிறோம். போதுமான அளவு தூக்கம் இல்லாதபோது, அது பலவித பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன.

இந்த நிலையில்  பகல் நேர உறக்கம் உடல் எடையை அதிகரிக்குமா? என்கிற சந்தேகம் பலருக்குண்டு. இதற்கான விளக்கம் என்ன?

பகல் நேரத் தூக்கத்தை ஆங்கிலத்தில் 'பவர் நாப்' (power nap) என்று சொல்வார்கள். இந்தத் தூக்கமானது அதிகபட்சமாக 30 நிமிடங்களைத் தாண்டக்கூடாது.

சிலருக்கு ஷிஃப்ட் மாறி மாறி வேலை செய்ய வேண்டியிருக்கும். அதன் காரணமாக பகல் வேளையில் சிறிது நேரம் தூங்க வேண்டும் போலத் தோன்றும்.

அதிகாலையில் சீக்கிரமே எழுந்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, கணவரையும் பிள்ளைகளையும் வேலைக்கும் படிக்கவும் அனுப்பும் இல்லத்தரசிகளுக்கு களைப்பின் காரணமாக, மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தேவைப்படும்.

அப்படி சில நிமிடங்கள் தூங்கி எழுந்தால்தான், அன்றைய நாளின் மிச்ச நேரத்தை எனர்ஜியோடு கடக்க முடியும், அடுத்தடுத்த வேலைகளைச் செய்ய முடியும் என்று சொல்வார்கள்.

அந்த வகையில், யாராக இருந்தாலும் மதிய வேளையில் 30 நிமிடங்கள் வரை தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமோ என பயப்படத் தேவையில்லை.

'வெறும் அரை மணி நேரத் தூக்கமெல்லாம் ஒரு தூக்கமா... படுத்ததும் 30 நிமிடங்கள் ஆகிவிடுமே' என்று சொல்வோர் இருக்கிறார்கள். ஆனால், உடல் எடை அதிகரிக்கக்கூடாது என விரும்புவோர், இதைப் பின்பற்றிதான் ஆக வேண்டும்.

30 நிமிடங்களுக்கு மேல் தூங்குவோருக்கு உடல் எடை அதிகரிப்பது மட்டுமன்றி, தூங்கி எழுந்திருக்கும்போது மந்தமாக உணர்வது, நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் போன்ற தேடல் அதிகரிப்பது, குறிப்பாக, இனிப்பான, உப்பான உணவுகளின் மீதான தேடல் அதிகரிப்பது போன்றவையும் ஏற்படலாம் என்கின்றன ஆய்வுகள்.

எனவே, ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், அதே நேரம் சற்று இளைப்பாறி, களைப்பையும் போக்க வேண்டும் என நினைத்தால் பகலில் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குவதைத் தவிர்க்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கிச்சன் கீர்த்தனா : ஹெல்த்தி உருண்டை

இது என்னடா புது உருட்டா இருக்கு: அப்டேட் குமாரு

மோகன்லாலை தாக்கிய ‘விசித்திர ‘மயால்ஜியா… கெட் வெல் லாலேட்டா!

90ஸ் கிட்ஸுக்கு போட்டிக்கு வந்துள்ள ஸ்வீடன் இளைஞர்… தமிழ் பொண்ணுதான் வேணுமாம்!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...