Skip to main content

கோட் முதல்நாள் வசூல் : கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த இந்தி!



தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் அவரது ரசிகர்களின் உற்சாகமான கொண்டாட்டத்திற்கு இடையே இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

பொதுவாக விஜய் படத்திற்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெளியாகும் தியேட்டர்கள் மூலம் அதிக வசூல் கிடைக்கும்.

தமிழக வெற்றி கழகம் கட்சி அறிவிப்புக்கு பின் வெளியாகும் படம் என்பதால் தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை தனிப்பட்ட முறையில் விஜய்யும் கவனித்து வருகிறார்.

அதற்கு வழி செய்யும் வகையில் உலகம் முழுவதும் கோட் திரைப்படம் வழக்கத்தை காட்டிலும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படம் உலகளவில் ரூ.148.5 கோடி வசூல் செய்ததாக அப்படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதுவே விஜய் படத்தின் முதல் நாள் அதிகபட்ச வசூல் சாதனையாக பார்க்கப்படும் நிலையில், அதிக தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ள கோட் அந்த சாதனையை முறியடிக்குமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதே உண்மை என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் திரைப்படங்கள் வசூல் சாதனை படைக்க படத்தின் இந்தி ரிலீஸும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் தி கோட் படத்தின் இந்தி வெர்சன் திட்டமிட்டபடி இன்று வெளியாகவில்லை.

இந்தியில் ஒரு படத்தை வெளியிட வேண்டுமென்றால், 8 வாரங்களுக்கு பின்பு தான் ஓடிடியில் வெளியிடுவோம் என்ற நிபந்தனைக்கு தயாரிப்பு நிறுவனம் கட்டுப்பட வேண்டும்.  அதற்கு உடன்படாவிட்டால், எந்தவொரு படத்தையும்  வெளியிட முடியாது.

ஏற்கெனவே கோட் படத்தின் ஓடிடி விற்பனையை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் முடித்துவிட்டதால், 8 வாரங்கள் காத்திருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனினும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்புடன் கடைசி வரை பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இந்தியில் ‘கோட்’ வெளியாகவில்லை.

அதே வேளையில் மல்டிபிளக்ஸ் தவிர்த்து தனி திரையரங்குகளில் தி கோட் படத்தின் இந்தி வெர்சன் வெளியாகியுள்ளது. ஆனால் வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் முன்பு அவற்றின் வசூல் குறைவு தான் என்கின்றனர்.

தென்னிந்தியாவில் பிவிஆர், ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் கூட இந்தி பதிப்பு அல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பதிப்புகளில் மட்டுமே ‘தி கோட்’ வெளியாகி உள்ளது.

மேலும் கனமழையால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு கோட் படத்தின் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் விஜயின் கோட் படத்தின் முதல் நாள் வசூல், அவரது முந்தைய படமான லியோவை விட தாண்டுமா என்பது சந்தேகம் தான் என திரையுலக வட்டாரங்கள் கணித்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கிறிஸ்டோபர் ஜெமா

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது? : சென்னை கமிஷனர் பதில்!

ஓர் ஆசிரியர் எப்படி வாழ வேண்டும்?

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...