Skip to main content

நடிகர் விஜய் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?



2023-24ஆம் நிதியாண்டில் அதிக வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலை ஃபார்சூன் இந்தியா நிறுவனம் நேற்று (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் தளபதி விஜய் 2வது இடம் பிடித்துள்ளார். அவர் கடந்த நிதியாண்டில் ரூ.80 கோடி வரிப்பணமாக அரசுக்கு செலுத்தியுள்ளதாக ஃபார்சூன் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த 2023-24 நிதியாண்டு காலகட்டத்தில் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

சுமார் ரூ.300 கோடி பொருட்செலவில் 'லியோ' படம் தயாரான நிலையில், பாக்ஸ் ஆபீஸில் அப்படம் சுமார் ரூ.620 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்திற்காக நடிகர் விஜய் ரூ.120 கோடி ஊதியமாக பெற்றதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து, 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை துவங்கிய விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில், 'தி கோட்' (The Greatest of All Time) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் தயாராகியுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்த நிலையில், நடிகர் விஜய்க்கு மட்டும் ரூ.200 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிக வரி செலுத்தும் நடிகர்கள் பட்டியலில் விஜய் 2வது இடத்தை பிடித்துள்ள நிலையில், நடிகர் ஷாரூக் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் ரூ.95 கோடி வரிப் பணம் செலுத்தியுள்ளார்.

சல்மான் கான் இப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.75 கோடி வரிப் பணமாக செலுத்தியுள்ளார்.

ரூ.71 கோடி வரி செலுத்தியுள்ள அமிதாப் பச்சன் இப்பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளார்.

அஜய் தேவ்கன் ரூ.42 கோடி வரிப்பணம் செலுத்தி இப்பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர்களில், தலா ரூ.14 கோடி வரியாக செலுத்தி, மோகன் லால் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

நடிகைகளில், அதிகப்படியாக கரீனா கபூர் ரூ.20 கோடி வரிப்பணமாக செலுத்தியுள்ளார்.

அவரை தொடர்ந்து கியாரா அத்வானி ரூ.12 கோடி வரிப்பணமாக செலுத்தியுள்ளார்.

கத்ரீனா கைஃப் ரூ.11 கோடி வரிப்பணமாக செலுத்தியுள்ளார்.

- மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

Aus vs Sco: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா

கோலியா? தோனியா? அதிக வரிப் பணம் செலுத்தும் கிரிக்கெட் வீரர் யார்?

வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!

Paralympics 2024: மீண்டும் 4 பதக்கங்கள்… ஹர்விந்தர் சிங், தரம்பீர் புதிய சாதனை!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...