Skip to main content

நடிகர் விஜய் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?



2023-24ஆம் நிதியாண்டில் அதிக வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலை ஃபார்சூன் இந்தியா நிறுவனம் நேற்று (செப்டம்பர் 4) வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் தளபதி விஜய் 2வது இடம் பிடித்துள்ளார். அவர் கடந்த நிதியாண்டில் ரூ.80 கோடி வரிப்பணமாக அரசுக்கு செலுத்தியுள்ளதாக ஃபார்சூன் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த 2023-24 நிதியாண்டு காலகட்டத்தில் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

சுமார் ரூ.300 கோடி பொருட்செலவில் 'லியோ' படம் தயாரான நிலையில், பாக்ஸ் ஆபீஸில் அப்படம் சுமார் ரூ.620 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்திற்காக நடிகர் விஜய் ரூ.120 கோடி ஊதியமாக பெற்றதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து, 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை துவங்கிய விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில், 'தி கோட்' (The Greatest of All Time) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் தயாராகியுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்த நிலையில், நடிகர் விஜய்க்கு மட்டும் ரூ.200 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிக வரி செலுத்தும் நடிகர்கள் பட்டியலில் விஜய் 2வது இடத்தை பிடித்துள்ள நிலையில், நடிகர் ஷாரூக் கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் ரூ.95 கோடி வரிப் பணம் செலுத்தியுள்ளார்.

சல்மான் கான் இப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.75 கோடி வரிப் பணமாக செலுத்தியுள்ளார்.

ரூ.71 கோடி வரி செலுத்தியுள்ள அமிதாப் பச்சன் இப்பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளார்.

அஜய் தேவ்கன் ரூ.42 கோடி வரிப்பணம் செலுத்தி இப்பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர்களில், தலா ரூ.14 கோடி வரியாக செலுத்தி, மோகன் லால் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

நடிகைகளில், அதிகப்படியாக கரீனா கபூர் ரூ.20 கோடி வரிப்பணமாக செலுத்தியுள்ளார்.

அவரை தொடர்ந்து கியாரா அத்வானி ரூ.12 கோடி வரிப்பணமாக செலுத்தியுள்ளார்.

கத்ரீனா கைஃப் ரூ.11 கோடி வரிப்பணமாக செலுத்தியுள்ளார்.

- மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

Aus vs Sco: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா

கோலியா? தோனியா? அதிக வரிப் பணம் செலுத்தும் கிரிக்கெட் வீரர் யார்?

வேலைவாய்ப்பு : பெல் நிறுவனத்தில் பணி!

Paralympics 2024: மீண்டும் 4 பதக்கங்கள்… ஹர்விந்தர் சிங், தரம்பீர் புதிய சாதனை!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...