Skip to main content

சண்டே ஸ்பெஷல்: மீன்பிடி தடை காலத்தில் நல்ல மீன்கள் வாங்குவது எப்படி?

ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது.

மீன்பிடி தடை காலங்களில் ஒரு பகுதியில் தடைக்காலம் போடும்போது, இன்னொரு பகுதியில் மீன்கள் கிடைக்கும் என்றாலும், பெரிய அளவில் இருக்காது. எல்லா வகை மீன்களும் கிடைக்காது. கிடைக்கும் மீன்களுக்கும் டிமாண்ட் அதிகம் இருக்கும், விலையும் அதிகமாக இருக்கும்.

எனவே, அந்தக் காலத்தில், குறிப்பிட்ட மீன்தான் வேண்டும் என்று இல்லாமல் கிடைக்கிற மீன் வகைகளை வாங்கிக்கொள்ளலாம். இல்லையெனில் ஆறு, குளத்து மீன்கள் போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மீன்களைப் பொறுத்தவரை மத்தி மீனில் அதிகளவில் ஒமேகா 3, கால்சியம் போன்ற சத்துகள் உள்ளன.  மீன் எண்ணெய் எடுப்பதற்கு அதிக அளவில் மத்தி மீன் பயன்படுத்தப்படுவதால், இதற்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது என்றாலும், இது சீக்கிரமாகக் கெட்டுப் போகக்கூடிய தன்மை உள்ளது என்பதால், கவனித்து வாங்க வேண்டும்.

மத்தி மீனின் காதுகளுக்குப் பின் பூ போன்ற அமைப்பு இருக்கும். இது மீனின் சுவாச உறுப்பு (gills). அதன் நிறத்தை கவனிக்க வேண்டும். பிடித்த உடன் விற்பனைக்கு வந்திருக்கும் மீன் என்றால், அது ரத்த சிவப்பில் இருக்கும். பல மணி நேரம் ஆகியிருந்தால், அதன் நிறம் மங்கிக் காணப்படும்.

இந்த இரண்டு நிலைகளிலும் வாங்கிப் பயன்படுத்தலாம். அதுவே, அந்த சுவாச உறுப்பு அதீத பழுப்பு நிறத்திலோ, அழுக்கு இருப்பது போன்ற தோற்றத்தில் இருந்தாலோ,  மீன் வாடையாக அல்லாமல், அழுகியது போன்று வாடை வந்தாலோ வாங்கக் கூடாது.

பொதுவாக, மீன் வகைகளை வாங்கும்போது, அதன் தோல்தான் இண்டிகேட்டர். அது அந்தந்த மீனுக்கு உரிய தடிமனுடன் இருந்தாலும், ஐஸ் பெட்டியில் வைத்து ஒரேயடியாக விரைத்துப்போனதாக இல்லாமலும், கொழகொழவென இல்லாமலும், மிருதுவாக இருக்க வேண்டும்.

மீன்களைக் கழுவும்போது, கடல் மீன்களை மஞ்சள் கலந்த நீரில் கழுவினால் போதுமானது. ஆனால், அணைப் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை கல் உப்பு சேர்த்து நன்றாகத் தேய்த்துக் கழுவினால்தான் அதன் வழவழப்பு தன்மை குறையும்.

கோடைக்காலத்தில் வாங்கும் மீன்களை, உடனடியாக சமைத்துவிடுவதே நல்லது. அதிகபட்சமாக, மூன்று நாள்கள் வரை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்தலாம்.

முக்கியமாக, மசாலா போட்டு ஃப்ரீஸரில் வைக்கக் கூடாது. மீனில் ரத்தம் இல்லாத வண்ணம் சுத்தமாகக் கழுவி, தேவையெனில் மஞ்சள் மட்டும் சேர்த்து, ஃபிரீஸ் செய்து வைத்துக்கொள்ளலாம்.

கணவாய் மீனை ஃப்ரெஷ் ஆகக் கிடைக்கும் வாய்ப்புள்ள இடங்களில் மட்டுமே வாங்கவும். இது பொதுவாக இரண்டு, மூன்று வகைகளில் இருக்கும்.

பார்க்க, இளநீரின் தேங்காய் போன்ற தோற்றத்திலும், மேலே ஜெல்லி போன்றும் இருக்கும். அது தொய்ந்து போயிருந்தால் தவிர்ப்பது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கிச்சன் கீர்த்தனா: கம்பு மாவு அடை

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி ஸ்வீட் அல்வா

நடராஜனின் பந்துவீச்சில் பதுங்கிய டெல்லி… அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ்!

டிராவிஸ் அதிரடியில் நிலைகுலைந்த டெல்லி… சாதனை படைத்த ஐதராபாத்!

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்