Skip to main content

ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்த... 'கேப்டன் அமெரிக்கா' ஆக்ஷன் இயக்குநர்!

 கேப்டன் அமெரிக்கா ஆக்ஷன் இயக்குநர் ஸ்பிரோ ரசாடோஸ் வார் 2 திரைப்படத்தில் இணைந்து உள்ளதாகத், தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2௦19-ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. குறிப்பாக இதில் ஏஜெண்ட் கபீராக ஹிருத்திக் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

தற்போது 4 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் உடன் ஜூனியர் என்டிஆர் இணைந்துள்ளார். இவர்களோடு இணைந்து ஜான் ஆபிரகாம், கியாரா அத்வானி நடித்து வருகின்றனர்.

முதல் பாகத்தை விட இந்த பாகம் மிகுந்த பிரமாண்டமாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் அயன் முகர்ஜி ஷூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்.

இதற்காக ஹிருத்திக், ஜூனியர் என்டிஆர் இருவரும் தலா 6௦ நாட்கள் கால்ஷீட் அளித்துள்ளனர். இதில் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திற்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர் ஸ்பிரோ ரசாடோஸ் இப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேப்டன் அமெரிக்கா தி பர்ஸ்ட் சோல்ஜர், கேப்டன் அமெரிக்கா சிவில் வார் படங்களில் இவர் வடிவமைத்த சண்டைக்காட்சிகள் உலகப்புகழ் பெற்றவை. இதனால் இவரின் படங்களுக்கு என ஏராளமான ரசிகர்கள் இருகின்றனர்.

தற்போது வார் 2 படத்தில் ரசாடோஸ் இணைந்து இருப்பதால், இப்படத்தின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஸ்பிரோ ரசாடோஸ் அட்லி-ஷாரூக்கானின் ஜவான் படத்தின் சண்டை இயக்குநராக பணியாற்றி இருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஈவிஎம்-ல் வேறு மென்பொருளை ஏற்ற முடியுமா?: முன்னாள் தேர்தல் ஆணையர் பேட்டி!

ஊழியர்களை நீக்கியது கூகுள்… ஏன் தெரியுமா?

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: திருமா வலியுறுத்தல்!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...