Skip to main content

உயிர் தமிழுக்கு : விமர்சனம்!

 இயக்குநர் அமீர் யார் என்பதை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் சொல்ல ' பருத்தி வீரன் ' என்கிற ஒரு படமே போதும். ஆனால் நடிகர் அமீரை தமிழ் சமூகத்திற்கு யார் என்று வெளிச்சம் காட்டியது வெற்றி மாறன் தான். ' வட சென்னை ' திரைப்படத்தில் அமீர் நடித்த 'ராஜன் ' கதாபாத்திரம், தற்கால இளைஞர்களிடையே அமீர் - ஐ ராஜனாகவே கொண்டு சேர்த்தது.

சமீபத்தில் அமீர் சந்தித்த பிரச்சனைகள், சர்ச்சைகள் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு பின் அமீர் நடிப்பில் வெளியாகும் ஒரு அரசியல் திரைப்படம் ' உயிர் தமிழுக்கு '. அமீர் ஒரு திரை இயக்குநர் மட்டுமல்லாது அரசியல் விமர்சகரும் கூட.

ஆக, அவரது நடிப்பில் அரசியல் நய்யாண்டி திரைப்படம் வெளியாவதே பல எதிர்பார்ப்புகளை உண்டாக்கும். அதே எதிர்பார்ப்புடன் இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் என எதையும் காணாமல் படத்தை பார்க்கச் சென்றிருந்தோம்.

ஒன்லைன் :

சென்னையில் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார். ஆனால், அவரது மரணத்திற்கு காரணம் அந்த எம்.எல்.ஏ - விற்கும் ஆளும் கட்சி மாவட்ட செயலாளரான பாண்டியனுக்கும் இடையே உள்ள விரோதம் தான் எனப் பரவலாக பேசப்படுகிறது.

யார் இந்த பாண்டியன்?அவருக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்மந்தம்? போன்ற விஷயங்களை சொல்வதே ' உயிர் தமிழுக்கு ' படத்தின் ஒன்லைன்.

Uyir Thamizhukku movie review

விரிவான விமர்சனம் :

இந்தப் படத்தை அரசியல் சட்டையர் ஜானரில் எடுக்க வேண்டும் என நினைத்ததும், அதற்கு சரியான ஆளான அமீர் - ஐ கதையின் நாயகனாக்கியது எல்லாம் சரியான முடிவு தான். ஆனால் ஒரு அரசியல் சட்டையர் படத்திற்கு டிரெண்டில் உள்ளவற்றை வசனமாக பேசுவது, வாட்ஸ் ஆப் ஜோக்குகளை அள்ளித் தெளிப்பது, நேரடியாகவே சில கட்சிகளை சாடும் வசனங்களை வைப்பது மட்டும் போதாது என்பதை இயக்குநர் ஆதம் பாவா தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், அரசியல் சட்டையர் போல தொடங்கும் இந்தப் படம் காமெடி, லவ் என எங்கெங்கோ சென்று அனுமார் வால் போல் நீண்டு, ஒரு வழியாக ஒரு இடத்தில் நிறைவடைகிறது. இதை எழுத்திலேயே இயக்குநர் ஆதம் பாவா சரி செய்திருக்கலாம். படத்தில் இருக்கும் சில அடிப்படை தவறுகளை பார்க்கும் பொழுது படத்தின் மேக்கிங்கிலேயே பல சிக்கல்கள் இருந்திருக்கக் கூடும் என புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதெல்லாம் சாக்காக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

அமீர் என்கிற ஒரு சிறந்த நடிகரும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. ஆக, மிக சுமாரான ஒரு கதாபாத்திரத்தை ஏதேதோ செய்து காப்பாத்த முயன்றுள்ளார் அமீர். நாம் கண்டு வியந்த நடிகர் அமீரா இது என என்னும் அளவுக்கு ஹீரோயினைப் பார்த்து ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.

Uyir Thamizhukku movie review

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான ஹீரோயின் பாத்திரத்தின் வடிவமைப்பு மிக மோசமாக அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் முதல் பாதியில் அவர் வரும் காட்சிகளில் வெறும் பொம்மையாகவே இருக்கிறார். இதுபோன்ற அரசியல் படங்களில் நிகழும் சம்பவங்கள் சுவாரஸ்யமாக, உண்மைக்கு நெருக்கத்துடன் அமைந்தால் தான் அந்தப் படத்தை ரசித்துப் பார்க்க முடியும். ஆனால், இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சி கூட அமைக்கப்படவில்லை.

ஹீரோயின் வீட்டு வாசலில் அமீர் பிரசாரம் செய்யும் காட்சி, பொதுக் கூட்டம் நடத்தும் ஒரு காட்சி, ஒரு பிரச்சனையை ஹீரோ சரி செய்யும் ஒரு காட்சி என எந்த ஒரு காட்சியும் சுவாரஸ்யமாக அமைக்கப்படவில்லை. வித்யாசாகர் இசையில் உள்ள பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. அரசியல் நய்யாண்டி படம் என்பதற்காக ஆங்காங்கே வைக்கப்பட்ட நடப்பு அரசியல் குறித்த வசனங்கள் ஓகே. ஆனால் அவை படத்தோடு சேராமல் வெறும் வசனங்களாக மட்டுமே உள்ளது.

மொத்தத்தில் ' மாறன் ' திரைப்படத்திற்கு பிறகு அமீர் நடிப்பில் வெளியான ஒரு படு சுமார் திரைப்படம் தான் ' உயிர் தமிழுக்கு '

- ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!

ஜெகன்மோகன் ரெட்டி வெளிநாடு செல்ல கூடாது : சிபிஐ கடும் வாதம்!

சவுக்கு சங்கரை தொடர்ந்து… டெல்லியில் பெலிக்ஸ் கைது!

பஞ்சாயத்துக்கு வராத கமல்… லிங்குசாமி ஏமாற்றம்!

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்