Skip to main content

'மாயா ஒன்' டீசர்: புது சூப்பர் ஹீரோ.. பிரம்மிக்க வைக்கும் காட்சிகள்..

 மாநகரம், மாயவன், கேப்டன் மில்லர் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தற்போது இவரது நடிப்பில் மாயவன் படத்தின் இரண்டாம் பாகமான "மாயா ஒன்" படம் உருவாகி உள்ளது.

மாயவன் படத்தை இயக்கிய சி. வி. குமார் தான் மாயா ஒன் படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் ஆட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாயா ஒன் (MAAYA ONE) படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஏ.கே. என்டர்டெயின்மென்ட், அட்வென்சரஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது மாயா ஒன் படத்தின் டீசரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

மனிதர்களின் மூளையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல தீய செயல்களை செய்யும் வில்லன். இந்த ஆபத்தில் இருந்து மனித இனத்தை காப்பாற்ற சூப்பர் பவர் உள்ள ஹீரோ போராடுகிறார் என்பதே இந்த படத்தின் ஒரு லைன் கதை. டீசரில் பல VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நடிகர் சந்தீப் கிஷன் கையில் ஒரு வித்தியாசமான கிளவுஸ் அணிந்து கொண்டு ஒரு பக்கா சூப்பர் ஹீரோவாக காட்சியளிக்கிறார்.

https://www.youtube.com/watch?v=jQ5f_tGienU

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் நடிகர் விஜய்யின் கத்தி படத்தில் வில்லனாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடிய விரைவில் மாயா ஒன் படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்