Skip to main content

'மாயா ஒன்' டீசர்: புது சூப்பர் ஹீரோ.. பிரம்மிக்க வைக்கும் காட்சிகள்..

 மாநகரம், மாயவன், கேப்டன் மில்லர் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தற்போது இவரது நடிப்பில் மாயவன் படத்தின் இரண்டாம் பாகமான "மாயா ஒன்" படம் உருவாகி உள்ளது.

மாயவன் படத்தை இயக்கிய சி. வி. குமார் தான் மாயா ஒன் படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் ஆட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாயா ஒன் (MAAYA ONE) படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஏ.கே. என்டர்டெயின்மென்ட், அட்வென்சரஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது மாயா ஒன் படத்தின் டீசரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

மனிதர்களின் மூளையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பல தீய செயல்களை செய்யும் வில்லன். இந்த ஆபத்தில் இருந்து மனித இனத்தை காப்பாற்ற சூப்பர் பவர் உள்ள ஹீரோ போராடுகிறார் என்பதே இந்த படத்தின் ஒரு லைன் கதை. டீசரில் பல VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நடிகர் சந்தீப் கிஷன் கையில் ஒரு வித்தியாசமான கிளவுஸ் அணிந்து கொண்டு ஒரு பக்கா சூப்பர் ஹீரோவாக காட்சியளிக்கிறார்.

https://www.youtube.com/watch?v=jQ5f_tGienU

இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் நடிகர் விஜய்யின் கத்தி படத்தில் வில்லனாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடிய விரைவில் மாயா ஒன் படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டும் : சென்னை உயர் நீதிமன்றம்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...