Skip to main content

தனுஷ் - ஏ.ஆர்.ரகுமானின் “அடங்காத அசுரன்”!

 நடிகர் தனுஷ் ஒரு நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஒரு சிறந்த கலைஞராக சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது இயக்கத்தில் வெளியான "பா. பாண்டி" படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு "ராயன்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

ராயன் படத்திற்காக தனுஷ் மொட்டை கெட்டப்பில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது உள்ளது.

இந்நிலையில் இன்று (மே 9) ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "அடங்காத அசுரன்" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

https://www.youtube.com/watch?si=qN0Wjy-TdPNestnX&v=TWLv2oFVTP8&feature=youtu.be

"அடங்காத அசுரன் தான்... வணங்காத மனுஷன் தான்.." என்று தொடங்கும் இந்த பாடலை தனுஷ் மற்றும் ஏ. ஆர். ரகுமான் இணைந்து பாடியுள்ளார்கள். இதற்கான பாடல் வரிகளை தனுஷ் எழுத, பிரபுதேவா இந்த பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்த பாடலின் மேக்கிங் காட்சிகளை பார்க்கும்போது படத்தில் இந்த பாடல் மிகப் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "மரியான்" படத்தில் இடம்பெற்ற "கடல் ராசா" பாடலுக்குப் பிறகு தனுஷ் பாடல்வரிகளை எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள பாடல் இந்த "அடங்காத அசுரன்" என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி ராயன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை முன்னிட்டு தனுஷின் புதிய போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

- கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

4 ஆண்டுகள் விவேக்குடன் பேசாத சுந்தர்.சி – காரணம் தெரியுமா?

விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது!

ஆகஸ்ட் 15க்குள் 30 லட்சம் வேலைகள்… இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்த ராகுல்

தவறான முன்னுதாரணமாகிவிடும்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கூடாது: ED

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்