Skip to main content

மம்மூட்டி படத்தை இயக்கும் கௌதம் மேனன்?

 தமிழ் சினிமா இயக்குநர்களுள் முக்கியமானவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் அதனை தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வெற்றி இயக்குநர் என்ற பெயரை பெற்றது மட்டுமின்றி சினிமா கனவுடன் வாழும் பல இளைஞர்களின் ரோல் மாடலாகவும் திகழ்கிறார்.

தொடர்ந்து சினிமா இயக்குனராக கலக்கிக் கொண்டிருந்த கௌதம் மேனன் "அச்சம் என்பது மடமையடா" படத்திற்கு பிறகு பொருளாதார ரீதயாக பல பிரச்சனைகளை சந்திக்க தொடங்கினார்.

கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மற்ற இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய கௌதம் மேனன் பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து இன்று கௌதம் மேனன் இல்லாத தமிழ் படமே கிடையாது என்ற அளவிற்கு ஒரு நடிகராகவும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நடிகர் மம்மூட்டியே தயாரிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்மூட்டி நண்பகல் நேரத்து மயக்கம், காதல் தி கோர், கண்ணூர் ஸ்குவாட், பிரம்மயுகம் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அந்த படங்களில் நடிப்பது மட்டுமின்றி படத்தை தானே தயாரித்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து உள்ளார்.

அடுத்ததாக மம்மூட்டி நடித்து தயாரித்துள்ள திரைப்படம் டர்போ இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதனைத் தொடர்ந்து மம்மூட்டியின் அடுத்த படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளார் என்று வெளியாகி இருக்கும் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

கடைசியாக கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான "ஜோஸ்வா இமைப்போல் காக்க" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அந்த படத்தை தொடர்ந்து தனது கனவு படமான "துருவ நட்சத்திரம்" படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் பல முயற்சிகளை முன்னெடுத்தார்.

ரிலீஸ் தேதி எல்லாம் அறிவிக்கப்பட்ட பின்னர் படத்தை ரிலீஸ் செய்வதில் மீண்டும் பிரச்சனை உருவானதால் அந்த படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக CSK-வின் ஸ்டீபன் பிளெமிங்?

புயல் வேகத்தில் “டிராகன்” பட ஷூட்டிங் : பிரதீப் சம்பளம் இத்தனை கோடியா..?

சென்ட்ரல் டூ ஏர்போர்ட் : மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு…

ஜூன் மாதம் தொடங்கும் சூர்யா 44… ஷூட்டிங் எங்க தெரியுமா..?

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...