Skip to main content

கிச்சன் கீர்த்தனா : காளான் லசானியா

 அசைவ விரும்பிகளுக்கு மட்டுமன்றி, சைவ விரும்பிகளுக்கும் பிடித்த ஓர் உணவு காளான். அதில் விதம்விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பதே பலருக்கும் தெரியாது. அபரிமிதமான ஊட்டச்சத்துகள் கொண்ட காளானில் வித்தியாசமாக சமைத்து இந்த வார வீக் எண்டை ஸ்பெஷலாக்குங்கள். அதற்கு இந்த இத்தாலிய உணவான காளான் லசானியா ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?
காளான் - 200 கிராம் (மிகவும் சிறிதாக நறுக்கவும்)
நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப்
நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்
தக்காளி - 6 (நறுக்கவும்)
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஒரிகானோ - ஒரு டேபிள்ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் - அரை ஸ்டீபூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
பூண்டு - 6 பல் (நறுக்கவும்)
பீட்சா சாஸ் - 8 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
மயோனைஸ் - 3 டேபிள்ஸ்பூன்
துருவிய சீஸ் - 3 கப்
உப்பு - ஒன்றேகால் டேபிள்ஸ்பூன்

லசானியா ஷீட் தயாரிக்க:
மைதா - ஒன்றரை கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெஜிடபிள் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - ஒரு கப்

அலங்கரிக்க:
ஒரிகானோ - சிறிதளவு

எப்படிச் செய்வது?
மைதா மாவை எண்ணெய், வெண்ணெய், அரை டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து பால் ஊற்றி பரோட்டா மாவைப் போல் நன்றாக அடித்து மாவு மென்மையாகும் அளவுக்குப் பிசையவும். மாவின் மேற்பரப்பில் எண்ணெய் தடவி ஈரத் துணியால் மூடி வைக்கவும். கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய காளான், தக்காளி, குடமிளகாய், பூண்டு, வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து மிளகுத்தூள், ஒரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், முக்கால் டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து ரொம்பவும் வதக்காமல், கிரிஸ்பியாக இருக்கும்படியாக லேசாக வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.

மைதா மாவை மூன்று பிரிவுகளாகப் பிரித்து நம்மிடம் உள்ள பேக்கிங் பான் (pan) வடிவத்துக்கு மெல்லிய ஷீட்களாக உருட்டி சற்றே காற்றில் உலர வைக்கவும். இப்போது பேக்கிங் பான் (baking pan) மேற்பரப்பில் வெண்ணெய் தடவி அதன் மேல் ஒரு 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ் பரப்பவும். அதன் மேல் ஒரு பிரஷ்ஷினால் ஆலிவ் ஆயில் தடவவும். அதன் மேல் நாம் தயாரித்த மூன்று ஷீட்களில் ஒன்றைப் பரப்பி ஒரு டேபிள்ஸ்பூன் மயோனைஸ், 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ், ஒரு லேயர் நாம் கடாயில் தயாரித்த ஃபில்லிங், அதற்கு மேல் ஒரு கப் துருவிய சீஸ் போடவும். மீண்டும் இரண்டு ஷீட் லேயர்களையும் இதே வரிசையில் பரப்பி கடைசியில் உள்ள சீஸ் லேயர் மேல் ஒரிகானோ தூவவும். இதை 180 டிகிரி செல்ஷியஸுக்கு பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) வைக்கவும். 200 டிகிரி செல்ஷியஸில் 20-ல் இருந்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அவகாசம் கேட்கும் எஸ்.பி…. சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறதா நெல்லை கொலை வழக்கு?

கொஞ்சம் டிவி, கொஞ்சம் மொபைல்: அப்டேட் குமாரு

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்