Skip to main content

ஆன்மீகத்திற்கு எதிரானவனா நான்? - மேடையில் கொந்தளித்த மிஷ்கின்

 இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடித்துள்ள படம் ஹிட்லிஸ்ட். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழநியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், "விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், இருவரும் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கான இயக்குநர்கள். அவர்களது வெற்றிகளை எட்டிப் பிடிக்க முடியுமா என்கிற ஐயம் எனக்கு உண்டு

சினிமா விழா மேடைகளில் பொதுவான விஷயங்களை பேசுவது எனது பழக்கம். அப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் நான் பேசியதை முழுமையான செய்தியாக வெளியிடாமல் தங்களுக்கு தேவையான சிலவரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு பரபரப்பான செய்தியாக்குகின்றனர்.

கோயிலுக்கு போகாதீங்க சினிமாவுக்கு போங்க என நான் பேசியதை சர்ச்சைக்குரிய செய்தியாக்கி ஆன்மீகத்திற்கு எதிரானவனாக என்னை சித்தரித்து விட்டனர்.

கோயில் எனச் சொன்னது சர்ச்சையும் மசூதியையும் சேர்த்துதான். நான் பிறந்தது இந்து குடும்பத்தில், வளர்ந்த குடும்பம் முஸ்லீம், கல்யாணம் செய்தது கிருஸ்தவ குடும்பம்.  தியேட்டர்கள் இன்றைக்கு வெறிச்சோடி கிடக்கிறது. ஏனென்றால் எல்லாமே ஒரு போனுக்குள் அடங்கிவிடுகிறது. அதனால் தியேட்டரை மறந்துவிடுகிறோம்.

கோயில், சர்ச், மசூதியை விட சினிமா முக்கியம் என ஏன் கூறுகிறேன் என்றால், இரண்டு பேராக உட்கார்ந்து டிவி பார்த்து விடலாம். ஆனால், நிறைய பேர் உட்கார்ந்து பார்த்தால் தான் அது கொண்டாட்டம். அது போல முதல் கொண்டாட்டம் என்பது தியேட்டர். கோயில், சர்ச், மசூதி இந்த மூன்றும் ஆன்மீகத்தை தேடவைக்கிறது. ஆனால் தியேட்டர், தார்மீகத்தை தேடவைக்கிறது. ஒரு மேடையில் எதையும் முழுமையாக பேசமுடியாது சுருக்கமாக பேசுகிற போது அதில் ஒற்றை கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சாடாதீங்க. கோயிலுக்கும், சர்ச்சுக்கும், மசூதிக்கும் போங்க. தியேட்டருக்கு அடிக்கடி போங்க" என்று மிஷ்கின் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்