Skip to main content

புற்றுநோய் பாதித்தபோது... மனம் உடைந்த மனிஷா கொய்ராலா

 நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது என்னுடன் யாரும் இல்லை என நடிகை மனிஷா கொய்ராலா வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மனிஷா கொய்ராலா. பம்பாய் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், இந்தியன், முதல்வன், ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

அடுத்தடுத்து தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்து வந்த மனிஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்த இவர், அதிலிருந்து மீண்டு, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில், மனிஷா கொய்ராலா சமீபத்தில் வெளியான "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்" வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருந்தபோது சந்தித்த சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், “இந்த பயணம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அனைவரும் உடல் ஆரோக்கியத்தின் மீது மிகுந்த கவனமாக இருங்கள். எனக்கு நிறைய உறவினர்கள், பெரிய குடும்பம் இருக்கிறது.

அனைவருமே வசதி படைத்தவர்கள்தான். ஆனால், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, என்னுடன் யாரும் இல்லை, அனைவரும் விலகி விட்டார்கள். என் நண்பர்கள் கூட அப்போது என்னுடன் இல்லை.

அச்சமயத்தில் என்னுடன் இருந்தது என் பெற்றோர், எனது சகோதரர், சகோதரிகள்தான். புற்றுநோய் பாதித்த எனக்கு பல விசயங்கள் நடந்தன. நோய் பாதிப்பிற்கு முன் இருந்ததுபோல, தற்போது என் உடல் இல்லை.

என்னால் இப்போது எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. இப்போதும் நான் மன அழுத்தத்தோடுதான் இருக்கிறேன். அதே வலியோடுதான் எனது வேலைகளை செய்கிறேன்” என வருத்தத்துடன் மனிஷா கொய்ராலா பேசி உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழக அரசை எதிர்த்து போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு – காரணம் இதுதான்!

இஸ்லாமிய பெண்களின் புர்காவை விலக்கி சோதனை செய்த பாஜக வேட்பாளர்: தேர்தல் ஆணையம் ஆக்‌ஷன்!

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்