Skip to main content

வசூல் "ஸ்டார்" கவின்... ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா..?

 பியார் பிரேமா காதல் வெற்றிக்கு பிறகு இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் கடந்த மே 10 ஆம் தேதி வெளியான ஸ்டார் திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

சில கலவையான விமர்சனங்கள் ஸ்டார் படத்திற்கு கிடைத்திருந்தாலும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை.

20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஸ்டார் திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் 15 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்டார் படத்திற்கு முன்பாக கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருந்தது.

ஆனால் தற்போது ஸ்டார் திரைப்படம் வெளியான 4 நாட்களிலேயே 15 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பது இயக்குநர் இளன் மற்றும் நடிகர் கவினின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒருபுறம் இயக்குநர் சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படம் நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபிஸில் அதிக அளவில் வசூல் செய்து வந்தாலும், கவினின் ஸ்டார் திரைப்படம் தடுமாறாமல் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

ஸ்டார் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றி உள்ளது.

அமேசான் பிரைம் நிறுவனத்தின் ஒப்பந்தம்படி படம் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்பது தான்.

அதாவது வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி கவினின் ஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஓடிடி தளத்தில் வெளியான பிறகு கவினின் ஸ்டார் உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

புயல் வேகத்தில் “டிராகன்” பட ஷூட்டிங் : பிரதீப் சம்பளம் இத்தனை கோடியா..?

சென்ட்ரல் டூ ஏர்போர்ட் : மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு…

ஜூன் மாதம் தொடங்கும் சூர்யா 44… ஷூட்டிங் எங்க தெரியுமா..?

1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் வேலைவாய்ப்பு நிறுவனம்!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...