Skip to main content

ரசிகர் கொலை... நடிகர் தர்ஷன் சிறையில் ஜாலியோ ஜிம்கானா! - 7 பேர் சஸ்பெண்ட்!

சில மாதங்களுக்கு முன்பு, கன்னட நடிகை பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் தர்ஷனுடன் இருக்கும் படத்தைப் பதிவிட்டு, இருவரும் 10 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இருவருமே ஏற்கனவே திருமணமானவர்கள். இதற்காக, தர்ஷனின் மனைவி விஜயலட்சுமியும் பவித்ராவை கண்டித்திருந்தார்.

இது கன்னட சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் பவித்ராவுக்கு இன்ஸ்டாகிராமில் தர்ஷனும், விஜயலட்சுமியும் சேர்ந்து வாழும்படி அவரை விட்டு விலகும்படி மெசேஜ் செய்துள்ளார். மேலும், பவித்தராவுக்கு அவர் ஆபாசமாக மெசேஜ் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பவித்ரா தர்ஷனிடம் கூற, தர்ஷனோ ரேணுகா சுவாமி உறுப்பினராக இருக்கும் தன்னுடைய ரசிகர் மன்றத்தின் தலைவரைத் தொடர்புகொண்டு அவரை அழைத்து வரும்படி  கூறியிருக்கிறார். அதன்படி, தர்ஷனின் நண்பர் வினய் குமார் வீட்டுக்கு அழைத்துவர, ரேணுகா சுவாமி கடுமையாகத் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

தர்ஷனின் உத்தரவின்பேரில் ரேணுகா சுவாமியை செய்ததாக போலீஸில் சரணடைந்த மூன்று பேர் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, போலீஸார் தற்போது தர்ஷன், பவித்ரா கைது செய்யப்பட்டனர். தற்போது, தர்ஷன் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தர்ஷன் சிறையில் ராஜ வாழ்க்கை வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக 25 செகண்ட் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் , தர்ஷன் சிறையில் புல்வெளி பகுதியில் சேரில் அமர்ந்து கொண்டு ஜாலியாக பேசி சிரித்து கொண்டிருக்கிறார். ஒரு கையில் கப்பில் டீ குடித்து கொண்டிருக்கிறார். மற்றொரு கையில் சிகரெட் உள்ளது. இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

-எம்.குமரேசன்

ஒலிம்பியன் ஸ்ரீஜேஷை அவமானப்படுத்திய கேரள அரசு… இரு முறை பாராட்டு விழாவை ரத்து செய்து அதிர்ச்சி!

திருமண மேடையில் ஏற்பட்ட காய்ச்சல்… புதுப்பெண் பலியான சோகம் – கேரளாவில் அதிர்ச்சி!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...