Skip to main content

கர்ப்பிணியாக இருந்த போது , வயிற்றில் எட்டி உதைத்தார்- நடிகர் முகேஷின் கொடுமைகள் - நடிகை சரிதா கண்ணீர்!

மலையாள நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2011 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றனர்.

இப்போது, கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாக நடிகர் முகேஷ் உள்ள நிலையில், அவரை பற்றி நடிகை சரிதா பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

இதுகுறித்து கேரள ஊடகத்திடம் நடிகை சரிதா கூறுகையில், நான் இந்த தகவல்களை வெளியே சொல்வதற்காக வெட்கப்படுகிறேன்.

முகேசுக்கு பலருடன் தொடர்பு இருந்தது. பல சினிமாக்களில் நடித்துள்ளேன். சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை பார்த்துள்ளேன்.

ஆனால், உண்மையிலேயே எனக்கும் அப்படி நடக்குமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு நடந்த கொடுமைகள் குறித்து மீடியாக்களிடம் இதுநாள் வரை கூறியதில்லை.

நான் கர்ப்பிணியாக இருந்த போது, ஓணம் பண்டிகை வந்தது. இந்த தருணத்தில் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கதானே நினைப்போம். ஆனால், இந்த சமயத்தில் கூட முகேஷ் சண்டை போட்டு என்னை வயிற்றில் எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அப்போது, நீதான் நல்ல நடிகைதானே சிறப்பாக நடிக்கிறாய் என்று கூறி சிரித்தார்.

அவர் எப்போது எப்படி நடப்பார் என்பதை கணிக்கவே முடியாது. 9 மாத கர்ப்பிணியாக நான் இருந்த போது, ஹோட்டலுக்கு டின்னருக்கு சென்றோம். வெளியே வந்த போது, என்னை காரில் ஏறவிடவில்லை.

காரை முன்னும் பின்னும் இயக்கினார். நான் காருக்காக அங்குமிங்கும் ஓடுகிறேன். கடைசியில் கீழேவும் விழுந்து விட்டேன். அந்த இடத்திலேயே கதறி அழ தொடங்கினேன்.

மற்றொரு இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, ஏன் லேட்டாக வந்தீர்கள் என்று கேட்டதற்காக என் தலையை பிடித்து தரையில் அடித்தார். அதன் பிறகு, முகேஷின் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

ஒரு முறை என்னை சந்திக்க முகேஷின் தந்தை வந்தார். அவர் என்னிடத்தில் தன் மகனின் நடவடிக்கைகள் சரியில்லை என்று என் கையை பிடித்துக் கொண்டு சொன்னார். ஆனால், என்ன நடந்தாலும் தயவு செய்து வெளியே சொல்லி விடாதே என்று என்னிடத்தில் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

அவருக்கு சத்யம் செய்து கொடுத்ததால், நான்  மாமா உயிருடன் இருந்த வரை நான் அனுபவித்த கொடுமைகளை வெளியே சொல்லவில்லை. ஆனால், இப்போது, அந்த சத்தியத்தை உடைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

-எம்.குமரேசன்

தங்கம் விலை : இன்றைய நிலவரம்!

தங்கலான் படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்