Skip to main content

கர்ப்பிணியாக இருந்த போது , வயிற்றில் எட்டி உதைத்தார்- நடிகர் முகேஷின் கொடுமைகள் - நடிகை சரிதா கண்ணீர்!

மலையாள நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2011 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றனர்.

இப்போது, கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாக நடிகர் முகேஷ் உள்ள நிலையில், அவரை பற்றி நடிகை சரிதா பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

இதுகுறித்து கேரள ஊடகத்திடம் நடிகை சரிதா கூறுகையில், நான் இந்த தகவல்களை வெளியே சொல்வதற்காக வெட்கப்படுகிறேன்.

முகேசுக்கு பலருடன் தொடர்பு இருந்தது. பல சினிமாக்களில் நடித்துள்ளேன். சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை பார்த்துள்ளேன்.

ஆனால், உண்மையிலேயே எனக்கும் அப்படி நடக்குமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு நடந்த கொடுமைகள் குறித்து மீடியாக்களிடம் இதுநாள் வரை கூறியதில்லை.

நான் கர்ப்பிணியாக இருந்த போது, ஓணம் பண்டிகை வந்தது. இந்த தருணத்தில் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கதானே நினைப்போம். ஆனால், இந்த சமயத்தில் கூட முகேஷ் சண்டை போட்டு என்னை வயிற்றில் எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அப்போது, நீதான் நல்ல நடிகைதானே சிறப்பாக நடிக்கிறாய் என்று கூறி சிரித்தார்.

அவர் எப்போது எப்படி நடப்பார் என்பதை கணிக்கவே முடியாது. 9 மாத கர்ப்பிணியாக நான் இருந்த போது, ஹோட்டலுக்கு டின்னருக்கு சென்றோம். வெளியே வந்த போது, என்னை காரில் ஏறவிடவில்லை.

காரை முன்னும் பின்னும் இயக்கினார். நான் காருக்காக அங்குமிங்கும் ஓடுகிறேன். கடைசியில் கீழேவும் விழுந்து விட்டேன். அந்த இடத்திலேயே கதறி அழ தொடங்கினேன்.

மற்றொரு இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, ஏன் லேட்டாக வந்தீர்கள் என்று கேட்டதற்காக என் தலையை பிடித்து தரையில் அடித்தார். அதன் பிறகு, முகேஷின் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

ஒரு முறை என்னை சந்திக்க முகேஷின் தந்தை வந்தார். அவர் என்னிடத்தில் தன் மகனின் நடவடிக்கைகள் சரியில்லை என்று என் கையை பிடித்துக் கொண்டு சொன்னார். ஆனால், என்ன நடந்தாலும் தயவு செய்து வெளியே சொல்லி விடாதே என்று என்னிடத்தில் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

அவருக்கு சத்யம் செய்து கொடுத்ததால், நான்  மாமா உயிருடன் இருந்த வரை நான் அனுபவித்த கொடுமைகளை வெளியே சொல்லவில்லை. ஆனால், இப்போது, அந்த சத்தியத்தை உடைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

-எம்.குமரேசன்

தங்கம் விலை : இன்றைய நிலவரம்!

தங்கலான் படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...