Skip to main content

நடிகையின் மேல் கை வைத்த டைரக்டர்... பிரபல டைரக்டரை காலரை பிடித்து தூக்கிய தந்தை!

மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் குறித்து ஹேமா அறிக்கையில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள தகவல் பல அதிர்ச்சிக்கரமாக உள்ளன.

பிரபல டைரக்டர் ஒருவரை நடிகையின் தந்தை ஒருவர் காலரை பிடித்து தூக்கியதாக ஒரு சம்பவமும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. விவரம் இதோ!

மலையாளத்தில் செல்வ செழிப்புள்ள வீட்டில் இருந்து அறிமுக நடிகை ஒருவர் பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தினமும் படபிடிப்புக்கு தனது தந்தையுடன் அந்த நடிகை வந்துள்ளார். பிடப்பிடிப்பின் போது, அந்த நடிகை பல டேக்குகள் எடுத்தாலும் இயக்குநர் சாந்தமாக சொல்லி கொடுத்துள்ளார். ஒரு முறை கூட திட்டியது இல்லையாம்.

ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு முடியும் தருவாயை எட்டியுள்ளது. அப்போது, தனது அறைக்கு அந்த நடிகையை இயக்குநர் அழைத்துள்ளார். முதலில் அவரிடத்தில் படம் ஹிட் ஆகும். உங்களுக்கு பல வாய்ப்புகள் கொட்டும் என்று பேசியவர், அப்படியே நடிகையின் மீது கை வைத்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நடிகை உடனடியாக கதவை திறந்து அறையை விட்டு வெளியே ஓடி விட்டார். பின்னர், தனது தந்தையிடம் நடந்த விஷயங்களை கூற, அவர் கடும் கோபத்துடன் டைரக்டர் அறைக்கு வந்து சட்டை காலரை பிடித்து தூக்கியுள்ளார்.

நடிகையின் தந்தையிடன் கெஞ்சிய அந்த பிரபல டைரக்டர், இந்த விஷயத்தை வெளியே கூறி விட வேண்டாம். படத்துக்கு கெட்ட பெயர் வந்து விடுமென்று கெஞ்சி கூத்தாடி மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த படமும் வெளியாகி ஹிட் அடித்தது- ஆனால், அந்த நடிகைக்கு எந்த புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

டைரக்டர் செய்த லாபியால் அந்த புதுமுக நடிகைக்கு அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இதையடுத்து, அந்த நடிகை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

-எம்.குமரேசன் 

தவெக கட்சி கொடி அறிமுக விழாவில் கண்கலங்கிய புஸ்ஸி ஆனந்த்!!

கண் அசைத்த அமித்ஷா… மத்திய அமைச்சராக இருந்து கொண்டே நடிக்க வருகிறார் சுரேஷ் கோபி!

 

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...