Skip to main content

கடைசி வரை வாய் மூடி மவுனம்... நன்றி கூறி வெளியேறிய மோகன்லால்... இதெல்லாம் நியாயமா லாலேட்டா?

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா அறிக்கையில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, மலையாள நடிகர்கள் சங்கமான அம்மாவின் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் விலகியுள்ளார்.

அதோடு, நிர்வாகக் குழுவும் கலைக்கப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பல நடிகைகள் புகார் சொன்ன போதும் கூட நடிகர் மோகன்லால் மவுனமாகவே இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் மோகன்லால் தலைவர் என்கிற ரீதியில் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசவில்லை. இந்த நிலையில், அம்மா சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பொது செயலாளர் பதவியில் இருந்து விலகிய நடிகர் சித்திக்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அந்த அறிக்கையில் இரண்டு மாதங்களுக்குள் பொதுக்குழு கூடி புதிய நிர்வாக குழுவை தேர்வு செய்யும். அதுவரை, பழைய நிர்வாகிகளே அம்மா அமைப்பை தங்கு தடையின்றி இயங்கும் வகையில் பார்த்துக் கொள்வார்கள் .

நடிகர் , நடிகைகளுக்கு பண,மருத்துவ உதவி உள்ளிட்டவை தங்கு தடையின்றி கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஹேமா அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையடுத்து தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எங்களை விமர்சித்த தவறை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி தனிப்பட்ட முறையில் மோகன்லால் பாலியல் வன்கொடுமைகள் குறித்து எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை. முன்னதாக, மலையாள படவுலகில் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் தெரியும் என்றும் ஆனால், அதை எதிர்த்து போராடும் தைரியம் இல்லாமல் இருந்தனர் என்கிற  பேச்சு அடிபட்டது உண்டு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

-எம்.குமரேசன்

கொட்டுக்காளி வசூல்… சிவகார்த்திகேயனை மறைமுகமாக சாடிய அமீர்

பின்வாங்கவே மாட்டேன்… 70 வயது எடப்பாடி பேசியது சரியா? – அண்ணாமலை ஆவேசம்!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...