Skip to main content

வெறுத்து ஒதுக்கிய பெயர்... தவிர்க்க முடியாததாக மாறியது எப்படி? - மம்முட்டிக்கு 73 வயது!

பல மொழி படங்களில் நடித்த மம்முட்டியை கேரள ரசிகர்கள் மெகாஸ்டார் என கொண்டாடுகின்றனர். மம்முட்டி என்ற பெயர் அவருக்கு எப்படி வந்தது தெரியுமா?

மம்முட்டி என்ற பெயரே அவருக்கு பிடிக்காமல் இருந்தது. ஆனால், காலப்போக்கில் அந்த பெயரே அவருக்கு நிரந்தரமாகிப் போன கதையை இங்கு பார்க்கலாம்.

அடிப்படையில் மம்முட்டி குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் சம்பந்தமே கிடையாது. மம்முட்டியின் தந்தை இஸ்மாயில் துணி மற்றும் அரிசி வியாபாரம் செய்து வந்தார்.

இஸ்மாயில் அவரது மனைவி பாத்திமாவுக்கும் பிறந்த 6 குழந்தைகளில் மூத்த மகன்தான் மம்முட்டி. கடந்த 1951ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி பிறந்த மம்முட்டிக்கு பெற்றோர்  வைத்த பெயர் முகம்மது குட்டி.

பள்ளிக் கல்வியை முடித்த முகமது குட்டி எர்ணாகுளத்திலுள்ள மகாராஜாஸ் கல்லூரியில் பி.ஏ படித்தார்.  கல்லூரியில் சேர்ந்த போதுதான் முகம்மது குட்டி என்ற தனது பெயர் பட்டிக்காட்டுத்தனமாக இருப்பதாக தோன்றியது. உடனே முகம்மதுகுட்டி என்ற பெயருக்கு பதிலாக ஓமர் ஷெரிப் என்று மாற்றி வைத்து கொண்டார்.

சிலர் முகம்மது குட்டி என்ற பெயரை சுருக்கி, மம்முட்டி என்றே அழைத்தனர். ஆனால், இந்த பெயர் மம்முட்டிக்கு பிடிக்கவில்லை. சினிமா மீது தீராக்காதல் கொண்டிருந்த மம்முட்டி கல்லூரி படிக்கும் போதே சினிமாவில் நடிக்க தன்னை தயார் செய்து கொண்டார்.

கல்லூரி படித்துக் கொண்டிருந்தப் போது, 1971ஆம் ஆண்டு  வெளியான “அனுபவங்கள் பாலிச்சக்கல்” என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் மம்முட்டி. பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த மம்முட்டி, சினிமாவில் நடிப்பது அவரது குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. ஆரம்ப காலங்களில் சினிமாவில் நடிக்க கூடாது என்றும் தடுத்தனர். இதனால், வக்கீலுக்கு படித்து பயிற்சி எடுத்து கொண்டிருந்தார்.

அட்வகேட் பி.ஏ.முகம்மதுகுட்டி என்ற பெயர் பலகைதான் அவரது அலுவலகத்தில் இருக்கும். ஒரு முறை அவரது அலுவலகத்துக்கு,  போஸ்ட்மேன் ஒருவர் மம்முட்டி யார் என்று விசாரித்தபடியே வந்தார். போஸ்ட்மேன் கையில் அட்வகேட் முகம்மது குட்டிக்கு ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதம் ஜனசக்தி ஃபிலிம்சிலிருந்து எம்.டி.வாசுதேவன் நாயர் சார்பில் அனுப்பப்பட்டிருந்தது.தபாலில், மம்முட்டி என்றே எம்.டி. வாசுதேவன் நாயர் குறிப்பிட்டிருந்தார்.

மம்முட்டி என்ற பெயரை வெறுத்து ஒதுக்க நினைத்த அவருக்கு அந்த பெயரிலேயே கடிதம் வந்தது,அதுவும் எம்.டி. வாசுதேவன் நாயரிடத்தில் வந்தது ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது. தொடர்ந்து, பல மொழி படங்களில் நடித்து பிரமாதமான நடிகராக மாறினார்.  இப்போது, மம்முட்டி என்ற அதே பெயர் மம்முக்கா என்றும் செல்லமாக மாறி விட்டது.

மலையாள மெகா ஸ்டாருக்கு இன்று வயது 73, ஆனாலும் ஸ்டில் யங்மேன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

-எம்.குமரேசன்

Paralympics 2024: பாரிஸில் புதிய சாதனை படைத்த இந்தியா!

இறங்கிய தங்கம் விலை… இன்றைய நிலவரம்!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...