Skip to main content

பாலியல் புகார் : ’காவாலா’ பாடல் நடன இயக்குநர் கைது!



பாலியல் புகாரில் நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு திரைப்படம் மட்டுமல்லாது அனைத்து இந்திய மொழி திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வரும்  நடன இயக்குனர் ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டு இந்திய சினிமாவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அவரது குரூப்பில் இருந்த நடனப் பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது.  ஜனசேனா கட்சியில் இருந்து ஜானியை கட்சித் தலைவர் நீக்கியுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு பிலிம் சேம்பர் அமைப்பு ஜானி மீதான பாலியல் புகார் சம்பந்தமாக விசாரணையை தொடங்கியுள்ளது.

தற்போது 21 வயதாகும் பெண் 2019ம் ஆண்டிலிருந்தே  நடனக் குழுவில் இடம் பெற்று வந்துள்ளார். 18 வயது நிரம்பாத மைனர் பெண்ணை எப்படி நடனக்குழுவில் ஜானி சேர்த்தார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிட்டி விசாரணையை நடத்தி வருகிறது என்றும் பிலிம் சேம்பர் அறிவித்துள்ளது.

தெலுங்கு சினிமா மற்றும் டிவி டான்சர் மற்றும் டான்ஸ் டைரக்டர்ஸ் அசோசியேஷன் தலைவராக உள்ள ஜானியின் தலைவர் பதவியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி அந்த சங்க நிர்வாக குழுவிற்கு தெலுங்கு பிலிம் சேம்பர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், திரைத் துறையைச் சேர்ந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி புகார் அளிக்க தனியாக புகார் பெட்டி ஒன்றை சேம்பர் அலுவலக வாயிலில் வைத்துள்ளோம்.

அதில் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களது புகார் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் சேம்பர்  செயலாளர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜானி மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் நர்சிங்கி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் கோவாவில் இருந்த அவரை தெலுங்கானா போலீசார் இன்று கைது செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இவர் காவாலா, ரஞ்சிதமே உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பிரபல யூடியூபர் டேன்மே பட் எடை குறைத்தது எப்படி? ஆச்சரியத் தகவல்கள்!

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… தா.மோ.அன்பரசன் சொன்ன முக்கிய தகவல்!

மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் : எடப்பாடி

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...