Skip to main content

காவி உடை அணியாதது ஏன்? - சாமியாராக மாறிய புவனேஸ்வரி சொல்லும் விசித்திர காரணம்!


பாசமலர் சீரியல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை புவனேஸ்வரி. தொடர்ந்து, சந்திரலேகா, சித்தி என அடுத்தடுத்து தொடர்களில் நடித்து பிரபலமானார்.

சில சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரத்திலும் புவனேஸ்வரி நடித்துள்ளார். பிஸியான நடிகையாக மாறிய ஒரு கட்டத்தில் புவனேஸ்வரி விபச்சார வழக்கில் சிக்கியதால் பட வாய்ப்புகள் குறைந்து போனது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் இவர். ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சென்னைக்கு வேலை தேடி வந்த புவனேஸ்வரி, கடுமையான உழைப்பால் டிவி சீரியல் மற்றும் சினிமாக்களில் பலவற்றில் நடித்தார்.

சேதுராமன் தலைமையில் இயங்கிய தேவர் பேரவையில் மகளிர் அணி தலைவராக இருந்தார். மேலும், சென்னையில் 3, 4 பங்களாக்களை வைத்துக்கொண்டு அதனை சூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு வருகிறார்.

தற்போது, புவனேஸ்வரி பழைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, துறவு பூண்டு சாமியாராக வாழ்ந்து வருகிறார். காசிக்கு சென்று தீட்சையும் பெற்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல், தினந்தோறும் வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் மக்களுக்கு அன்னதானம் செய்து வருகிறார் . கோயம்பேட்டில் உள்ள கோவில் ஒன்றிலும் தினமும் அன்னதானம் இவரின் சார்பில் நடக்கிறது.

இது குறித்து புவனேஸ்வரி கூறியதாவது, "நடிப்பில் உச்சத்தில் இருந்த போது, எதிர்பாராமல் சிக்கலில் சிக்கினேன். நீதிமன்றத்தில் என்னை நிரூபித்து வெளியே வந்தேன்.

ஆனாலும், இந்த சமூகம் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறது. இரு வருடங்களுக்கு முன்பு ஆன்மீகத்தில் இறங்கினேன். தினமும் கோவில்களுக்கு செல்ல தொடங்கினேன். சிறு வயதில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட அனுபவம் உண்டு. இப்போது, என்னிடத்தில் பணம் இருக்கிறது.

அதனால், இப்போது தினமும் 300 பேருக்கு உணவளிக்கிறேன். கோவில்கள், மசூதி, தேவாலயங்கள் என அனைத்துக்கும் செல்கிறேன். எந்த மதமும் என் ஆன்மீக பயணத்துக்கு தடையாக இருக்க கூடாது.

ஒரு அரசியல் கட்சியிலும் மகளிர் அணி தலைவராக இருக்கிறேன். தீபாவளி பண்டிகைக்கு 10 ஆயிரம் பேருக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தேன். என்னை மக்கள் எப்படி வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு அதை பற்றி கவலை இல்லை.

நான் என்னை இறைப்பணிக்கு அர்ப்பணித்து விட்டேன். காவி உடை அணிந்தால் , என்னை விளம்பரப்படுத்தியது போல அமையும். அதனால், அந்த ஆடை அணியவில்லை. எனக்கு பிடித்த அரக்கு சேலை, மஞ்சள் நிறத்தில் உடை அணிகிறேன். கழுத்தில் ருத்திராட்சையும் அணிந்துள்ளேன் ''என்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

-எம்.குமரேசன்

விவசாயிகள் போராட்டத்தில் மதவாத திசை திருப்பல், திருப்பி அடிக்காதா?

Comments

Popular posts from this blog

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு ம...

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக ...