Skip to main content

சனம் ஷெட்டிக்கு வந்த ஃபோன் கால்….என்ன நடந்தது?

நடிகை சனம் ஷெட்டி தொலைபேசி மூலமாகப் பணம் பறிக்கும் ஒரு கும்பலிடம் தனக்கு வந்த அழைப்பைப் பற்றி எக்ஸ் தளத்தில் நேற்று மாலை ஒரு காணொலி வெளியிட்டுள்ளார்.

நடிகை சனம் ஷெட்டி மஹா, ஊமை செந்நாய், கதம் கதம் போன்ற தமிழ்ப் படங்களிலும், ஒரு சில மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2020-ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

இவருக்குச் சமீபத்தில் பணம் பறிக்கும் ஒரு கும்பலிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதைப் பற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் நேற்று மாலை ஒரு காணொலி பதிவேற்றியுள்ளார்.

அதில் “ நான் இன்று ஒரு ஆன்லைன் ஃபிஷிங்க் காலுக்கு விக்டிம் ஆகிட்டேன். நானே பலருக்கு உங்களின் விபரங்களைக் கேட்டு தொலைப்பேசி அழைப்பு வந்தால், கொடுக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் எனக்கே அப்படிப்பட்ட அழைப்பு ஒன்று வந்தது.

அழைப்பின் மறுமுனையில் பேசிய பெயர் குறிப்பிடாத நபர், உங்களின் தொலைபேசி எண், இன்னும் இரண்டு மணி நேரத்தில் செயலிழக்கப் போகிறது, அதன் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

நான் பதற்றத்துடன் ஏன்? என்று கேட்டேன். அதற்கு அந்த நபர், நீங்கள் சமீபத்தில் மும்பையில் ஒரு சிம் கார்டு வாங்கியுள்ளீர்கள். அந்த எண்ணில் இருந்து பலரை அழைத்து தொல்லை கொடுத்துள்ளீர்கள் என கூறினார்.

அதற்கு பின் என்னிடம், வேறு ஒரு நபர் பேசினார். விஜய் சோப்பையா என்று அறிமுகம் படுத்திக்கொண்ட நபர், உங்கள் மீது மும்பையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றார்.

அதற்கு நான் மும்பை பக்கம் வந்தே பல வருஷங்கள் ஆகிறது, எனக்கு இந்த ஒரு நம்பர் தான் இருக்கிறது என்றேன். உடனே, சரி உங்கள் சார்பாகப் புகார் அளிக்க வேண்டும் என்றால் உங்களின் விபரங்கள் எனக்கு வேண்டும் என்றார்.

அப்போது தான் என் மூளைக்குள் ஒரு பொறி தட்டியது, தொலைத்தொடர்பு துறையிடமே எனது ஆதார் மற்றும் மற்ற தகவல்கள் இருக்குமே, பின்பு எதற்கு என்னிடம் தனியாகத் தகவல்கள் கேட்கிறார்கள்? என்று கேட்டு அழைப்பைத் துண்டித்து விட்டேன்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு இது போலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவர் செய்த ஒரு தவறு, அவரது தொலைப்பேசிக்கு வந்த லிங்க்கை க்ளிக் செய்துள்ளார். திறந்தவுடன் அவரது வங்கிக் கணக்கின் மொத்த விபரமும் திருடப்பட்டுள்ளது.

அதனால் மக்களே இந்த மாதிரி அழைப்புகள் வந்தால் எடுக்க வேண்டாம். ஜாக்கிரதையாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

-அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்.... 

மலையாள நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் : “No என்றால் No தான்”…குஷ்பு பதிவு!

ரேகா நாயர் கார் ஏறி ஒருவர் பலி: நடிகை விளக்கம்!

ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் கொலை… மதிமுக மாவட்ட செயலாளர் கைது!

Comments

Popular posts from this blog

ஜமா: விமர்சனம்

  உதயசங்கரன் பாடகலிங்கம் இன்னொரு ‘அவதாரம்’!? ’இது நல்லாயிருக்கு’ என்று ’பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் போலச் சில நண்பர்கள் மிகச்சில திரைப்படங்களைப் பரிந்துரை செய்வதுண்டு. மிக மிக அரிதாக நிகழும் அந்த சம்பவம், சமீபத்தில் ‘ஜமா’ படத்திற்காக மீண்டும் நிகழ்ந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வை மிக அருகில் நின்று பார்க்கும் அனுபவத்தைத் தந்தது என்பதே அது போன்ற பாராட்டுகளின் சாராம்சமாக இருந்தது. பாரி இளவழகன் எழுதி இயக்கியதோடு, இந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி, சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், வசந்த் மாரிமுத்து, சிவ மாறன், மணிமேகலை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் இளையராஜா. ’ஜமா’ தரும் காட்சியனுபவம் எத்தகையது? கல்யாணத்திற்கு கல்யாணம்!   அருகேயுள்ள பள்ளிகொண்டம்பட்டு கிராமத்தில் தனது தாயோடு (கே.வி.என்.மணிமேகலை) வசித்து வருகிறார் கல்யாணம் (பாரி இளவழகன்). ஊருக்கு வெளியே விவசாய நிலம், அதன் நடுவே ஒரு குடிசை, சில பசுக்கள் என்று இவர்களது வாழ்க்கை இருந்து வருகிறது. விவசாயம் தவிர்த்து தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கல்யாணத்தின் இன்னொரு முக்கியமான வேலை

விமர்சனம் : வாழை!

உதயசங்கரன் பாடகலிங்கம் நினைவுகளை விட்டு நீங்காத சுமை ! ’ஏலே’, ‘என்னலே’ என்ற வார்த்தைகளைச் சேர்த்தாலே அது நெல்லை வட்டாரத்தில் நடக்கும் கதை எனச் சொல்லிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலேயே சென்று உலாவியது போல உணர்வைத் தந்தது ’வாழை’ படத்தின் ட்ரெய்லர். அதுவே மாரி செல்வராஜின் அப்படைப்பைப் பார்க்கத் தூண்டிய முதல் காரணம். தனது முந்தைய படங்களான ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் கூர்மையாக வடிவமைத்து, தான் சொல்ல வந்த கருத்துகளைத் தெளிவாக முன்வைத்த மாரி செல்வராஜின் கதை சொல்லலில் இருந்த நேர்த்தி, அதற்கடுத்தாற்போல அப்படம் நோக்கித் திரும்ப வைத்தது. அனைத்துக்கும் மேலே, இயக்குனரின் வாழ்வில் சில அனுபவங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம் எனும் தகவல் இன்னும் ஈர்ப்பை விதைத்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, ஜெ.சதீஷ்குமார் ஆகியோரோடு பொன்வேல், ராகுல் என்று இரு சிறுவர்கள் முதன்மை பாத்திரங்களாக நடித்துள்ளனர். சரி, ‘வாழை’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக

போகுமிடம் வெகுதூரமில்லை : விமர்சனம்!

ஒரு பயணத்தில் பல தீர்வுகள்! தமிழ் சினிமாவில் நல்லதாகச் சில படங்கள் தந்தும், ‘சிறந்த கலைஞர்’ என்ற பெயரைப் பெற்றும், சிலருக்குப் பெரிதாக வெற்றிகள் வாய்க்காமல் இருக்கும். ’நல்லதாகச் சில வாய்ப்புகள் அமைந்தால் நன்றாக இருக்குமே’ என்று ரசிகர்களே நினைக்கும்படியாக அவர்களது சினிமா வாழ்வு இருக்கும். அப்படியொருவராகத் திகழ்பவர் நடிகர் விமல். ‘பசங்க’ தொடங்கி ‘களவாணி’, ‘தேசிங்குராஜா’ என்று மேலே பறந்த அவரது கொடி சிலகாலம் தாழ்வாகப் பறந்தது. தற்போது மீண்டும் அவரது இன்னிங்ஸ் தொடங்கியிருக்கிறது. அதனை வெளிக்காட்டுவதாக இருந்தது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பட ட்ரெய்லர். இந்தப் படத்தில் அவருக்கு இணையான பாத்திரத்தில் கருணாஸும் இருக்கிறார். மைக்கேல் கே.ராஜா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்.ஆர்.ரகுநந்தன். எப்படி இருக்கிறது ‘போகுமிடம் வெகு தூரமில்லை’?! இரு துருவம்.. ஒரு பயணம்..! சென்னையிலுள்ள மருத்துவமனையொன்றில் அமரர் ஊர்தி டிரைவராக இருந்து வருகிறார் குமார் (விமல்). பெற்றோரைச் சிறு வயதில் இழந்த அவருக்கு தாத்தா மட்டுமே ஒரே துணை. ஒருநாள் தற்செயலாகக் குமார் கலையழகியைச் (மேரி ரிக்கெட்ஸ்) சந்திக்