மலையாள நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2011 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். இப்போது, கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாக நடிகர் முகேஷ் உள்ள நிலையில், அவரை பற்றி நடிகை சரிதா பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். இதுகுறித்து கேரள ஊடகத்திடம் நடிகை சரிதா கூறுகையில், நான் இந்த தகவல்களை வெளியே சொல்வதற்காக வெட்கப்படுகிறேன். முகேசுக்கு பலருடன் தொடர்பு இருந்தது. பல சினிமாக்களில் நடித்துள்ளேன். சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை பார்த்துள்ளேன். ஆனால், உண்மையிலேயே எனக்கும் அப்படி நடக்குமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு நடந்த கொடுமைகள் குறித்து மீடியாக்களிடம் இதுநாள் வரை கூறியதில்லை. நான் கர்ப்பிணியாக இருந்த போது, ஓணம் பண்டிகை வந்தது. இந்த தருணத்தில் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கதானே நினைப்போம். ஆனால், இந்த சமயத்தில் கூட முகேஷ் சண்டை போட்டு என்னை வயிற்றில் எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அப்போது, நீதான் நல்ல நடிகைதானே சிறப்பாக நடிக்கிறாய் என்று கூறி சிரித்தார். அவர் எப்போது எப்படி நடப்பார் என்பதை க
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதற்காக விழா நடத்துவது, கலைஞர்களை பாராட்டுவது, செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமான ஒன்று. தங்கலான் படத்தின் கதாநாயகன் விக்ரம் இதில் இருந்து வித்தியாசமாக விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒன்றை தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து திரைக்கலைஞர்களையும், தொழிலாளர்களையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிவெளியானது தங்கலான். வழக்கமான சினிமா படப்பிடிப்பாக தங்கலான் நடத்தப்படவில்லை. காடு, மலைகள் என கரடு முரடனான பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. எதிர்பார்த்த வெற்றியை இந்தப் படம் பெறவில்லை என்ற போதிலும் படம் உருவாக கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க படத்தின் கதாநாயகன் என்ற முறையில் நடிகர் விக்ரம் நேற்று விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த விருந்