Skip to main content

Posts

கர்ப்பிணியாக இருந்த போது , வயிற்றில் எட்டி உதைத்தார்- நடிகர் முகேஷின் கொடுமைகள் - நடிகை சரிதா கண்ணீர்!

மலையாள நடிகர் முகேசும் நடிகை சரிதாவும் கடந்த 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2011 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். இப்போது, கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாக நடிகர் முகேஷ் உள்ள நிலையில், அவரை பற்றி நடிகை சரிதா பல அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார். இதுகுறித்து கேரள ஊடகத்திடம் நடிகை சரிதா கூறுகையில், நான் இந்த தகவல்களை வெளியே சொல்வதற்காக வெட்கப்படுகிறேன். முகேசுக்கு பலருடன் தொடர்பு இருந்தது. பல சினிமாக்களில் நடித்துள்ளேன். சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை பார்த்துள்ளேன். ஆனால், உண்மையிலேயே எனக்கும் அப்படி நடக்குமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எனக்கு நடந்த கொடுமைகள் குறித்து மீடியாக்களிடம் இதுநாள் வரை கூறியதில்லை. நான் கர்ப்பிணியாக இருந்த போது, ஓணம் பண்டிகை வந்தது. இந்த தருணத்தில் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கதானே நினைப்போம். ஆனால், இந்த சமயத்தில் கூட முகேஷ் சண்டை போட்டு என்னை வயிற்றில் எட்டி உதைத்தார். நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அப்போது, நீதான் நல்ல நடிகைதானே சிறப்பாக நடிக்கிறாய் என்று கூறி சிரித்தார். அவர் எப்போது எப்படி நடப்பார் என்பதை க
Recent posts

தங்கலான் படக்குழுவுக்கு விருந்து வைத்த விக்ரம்

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதற்காக விழா நடத்துவது, கலைஞர்களை பாராட்டுவது, செய்தியாளர்களை சந்திப்பது வழக்கமான ஒன்று. தங்கலான் படத்தின் கதாநாயகன் விக்ரம் இதில் இருந்து வித்தியாசமாக விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒன்றை தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்து திரைக்கலைஞர்களையும், தொழிலாளர்களையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிவெளியானது தங்கலான். வழக்கமான சினிமா படப்பிடிப்பாக தங்கலான் நடத்தப்படவில்லை. காடு, மலைகள் என கரடு முரடனான பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. எதிர்பார்த்த வெற்றியை இந்தப் படம் பெறவில்லை என்ற போதிலும் படம் உருவாக கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி இயக்குநர்கள், கலை இயக்குநர்கள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க படத்தின் கதாநாயகன் என்ற முறையில் நடிகர் விக்ரம் நேற்று விருந்தோம்பல் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த விருந்

பாலியல் குற்றச்சாட்டு... நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு!

மலையாள திரையுலகில் பெண் கலைஞர்களுக்கு ஏற்பட்ட பாலியல் நெருக்கடி, குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்திய ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்பு துணை நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி பகிரங்கமாக ஊடகங்கள் வாயிலாக பேசிவருகின்றனர். பலர் ஹேமா கமிஷன் விசாரணை குழுவிடம் சம்பந்தபட்டவர்களின் பெயரை குறிப்பிட்டு வாக்குமூலம் அளித்துள்ளனர். நடிகைகள் கூறும் குற்றசாட்டுகளுக்கு சம்பந்தபட்டவர்கள் பதில் கூற தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகை மினு முனீர், மலையாள நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார். அதாவது முகேஷ் அவரது வீட்டிற்கு தன்னை அழைத்திருந்தபோது அங்கே சென்ற தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பதுதான் மினு முனீரின் குற்றச்சாட்டு. இந்த நிலையில் நடிகர் முகேஷ் இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2009ல் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தவர்தான் இந்த மினு முனீர். அப்போது மீனு குரியன் என்கிற பெயரில் தன்னுடைய புகைப்படங்கள் கொண்ட ஆல்பத்துட

வாழை கதை திருடப்பட்டதா? : எழுத்தாளர் சோ. தர்மன் போடும் பகீர் குண்டு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாழை. தனது சிறுவயது வாழ்க்கை வழியே 1999 ஆம் ஆண்டு நெல்லையில் வாழைத்தார் சுமக்கும் கூலித் தொழிலாளர்கள் 19 பேர் பலியான உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். படத்தின் இறுதிக்காட்சியை கண்டு திரையரங்கில் இருந்து கலங்கிய கண்களுடன் வெளிவரும் பலரும் படத்தை பாராட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாழை படம் எனது சிறுகதை இன்று வாழை திரைப்படமாக உருவாகி வெற்றி பெற்றுள்ளதை எண்ணி பெருமையடைவதாக சாகித்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் சோ. தர்மன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். ’வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது’ என்று. இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும் போதெல்லாம் வாழை

'கூலி' - யில் இணையும் சௌபின் சாஹிர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ' கூலி ' திரைப்படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர் நடிக்கிறார் என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பரபரப்பான இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ' கூலி ' திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு படத்தின் அறிவிப்பு முதலே அதிகரித்து வந்தது. சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அறிவிப்பு டீஸர் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6:30 முதல் அறிவிக்கப்படும் என அப்படக்குழுவால் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது இந்தப் படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ' தயால் ' என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். பான் இந்திய திரைப்படமாக உருவாகும். இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மேலும், பாலிவ

விஜய்யின் 'கோட்'... 3 மணி நேரம் ஓடும் படமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகவுள்ள ' கோட் ' திரைப்படம் 3 மணி நேரம் ஓடும் திரைப்படம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ' கோட் ' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தற்போது அந்தப் படத்தின் ரன் டைம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் ரன் டைம் 183 நிமிடங்களாம். சுமார் 3 மணி நேரம் 3 நிமிடம் வரை ஓடும் திரைப்படம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் படத்தின் நேரம் 179 நிமிடங்கள். மீதமுள்ள நிமிடங்களில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கோட் படத்தின் தணிக்கை வேலைகள் சில நாட்களுக்கு முன்பு நடந்தேறியது. ஆக, இயக்குநர் வெங்கட்பிரபுவின் 'மங்காத்தா ' படத்தைப் போலவே இந்தப் படத்திலும் மேக்கிங் வீடியோ கிளைமாக்ஸில் இடம்பெறவுள்ளது எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் ஆகாஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள

நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்பில் 16 வயது சிறுமி, தாய் பாலியல் வன்கொடுமை.... நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

மலையாளத் திரையுலகில் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் கலாச்சாரம் ஆழமாக வேரூன்றி உள்ளதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மீது தொடர்ந்து நடிகைகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகின்றனர். விவகாரம் முற்றியதையடுத்து, மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகியுள்ளனர். நடிகைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களைப் பற்றி விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அமைத்து உத்தரவிட்டார். இதுவரை 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் நடிகர் பிருத்விராஜ் படப்பிடிப்புத் தளத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகை ஒருவர் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். பிபின் பிரபாகர் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஒன் வே டிக்கெட் என்ற படம் வெளியானது . இதில் நடிகர் பிருத்விராஜ், பாமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் மம்முட்டியும் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்த

சனம் ஷெட்டிக்கு வந்த ஃபோன் கால்….என்ன நடந்தது?

நடிகை சனம் ஷெட்டி தொலைபேசி மூலமாகப் பணம் பறிக்கும் ஒரு கும்பலிடம் தனக்கு வந்த அழைப்பைப் பற்றி எக்ஸ் தளத்தில் நேற்று மாலை ஒரு காணொலி வெளியிட்டுள்ளார். நடிகை சனம் ஷெட்டி மஹா, ஊமை செந்நாய், கதம் கதம் போன்ற தமிழ்ப் படங்களிலும், ஒரு சில மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2020-ஆம் ஆண்டு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இவருக்குச் சமீபத்தில் பணம் பறிக்கும் ஒரு கும்பலிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதைப் பற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் நேற்று மாலை ஒரு காணொலி பதிவேற்றியுள்ளார். அதில் “ நான் இன்று ஒரு ஆன்லைன் ஃபிஷிங்க் காலுக்கு விக்டிம் ஆகிட்டேன். நானே பலருக்கு உங்களின் விபரங்களைக் கேட்டு தொலைப்பேசி அழைப்பு வந்தால், கொடுக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் எனக்கே அப்படிப்பட்ட அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பின் மறுமுனையில் பேசிய பெயர் குறிப்பிடாத நபர், உங்களின் தொலைபேசி எண், இன்னும் இரண்டு மணி நேரத்தில் செயலிழக்கப் போகிறது, அதன் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். நான் பதற்றத்துடன் ஏன்? என்று கேட்டேன். அதற்கு அந்த நபர், நீ

ரேகா நாயர் கார் ஏறி ஒருவர் பலி: நடிகை விளக்கம்!

நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை, ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் மஞ்சன் (55). நேற்றிரவு ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு பகுதியில் படுத்துக் கிடந்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. நேற்று இரவு 7.45 மணியளவில் அந்த வழியாக வந்த கார் மஞ்சன் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள்  அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் கார் எண்ணை வைத்து விசாரித்ததில் அந்த கார் நடிகை ரேகா நாயருடையது என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரது கார் ஓட்டுநரான பாண்டி என்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து ரேகா நாயர் பாலிமர் சேனலிடம் கூறுகையில், “சம்பவ இடத்தில் மன நிலை பாதித்த பிச்சை எடுக்கக் கூடிய ஒருவர் விழுந்து கிடந்தார். அவர் விழுந்து கிடந்தாரா அல்லது வண்டி வரும் போது

பணம் தராமல் அலைக்கழிப்பு : PVR நிறுவனத்துக்கு எதிராக திரும்பும் விநியோகஸ்தர்கள்!

இந்திய சினிமாவில் திரையரங்குகளில் படத்தை திரையிட்டு கிடைக்கும் வருமானத்தில் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் சதவீதம் தனி திரையரங்குகள் மூலமே அதிகமாக இருக்கும். மல்டிபிளக்ஸ், மால் திரையரங்குகள் மூலம் குறைவான சதவீத வருவாய் மட்டுமே கிடைக்கும். இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தனி திரையரங்குகளின் வருவாய் ஆதிக்கம் செலுத்தி வந்ததற்கு முடிவு கட்டிய பெருமை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கே உரியது. திரையரங்கு தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலீடு செய்து நவீனப்படுத்திய போது அதனை ஆதரித்து, ஊக்குவித்தவர்கள் திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் தான். புதிய படங்கள் வெளியாகும் போது மால் தியேட்டர்களுக்கு முதல் மரியாதை கொடுத்து அவர்களை தேடி சென்று படத்திற்கு திரைகள் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைப்பார்கள். முன் தொகை இல்லை என்றாலும் பரவாயில்லை திரை ஒதுக்கீடு செய்தால் போதும் என்ற நிலையில் படங்களை திரையிட ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் தனித் திரையரங்குகள் முன்தொகை கொடுத்து படத்தை திரையிட ஒப்பந்தம் செய்ய வருபவர்களை காக்க வைத்து அதிகபட்ட சதவீத பங்கு தொகை அடிப்படையில் படங்களை திரையிட ஒப்பந்தம் செய்வார்கள்.